scorecardresearch

ரூ 360 கோடி கோக்கைன் போதைப் பொருள் பறிமுதல்; சி.பி.ஐ விசாரிக்க வேண்டும்: இ.பி.எஸ்

ரூ.360 கோடி மதிப்பிலான கொகைன் போதைப்பொருள் பறிமுதல் வழக்கை, சி.பி.ஐ-யிடம் ஒப்படைத்து, இந்த வழக்கில் தொடர்புடைய அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

Edappadi Palaniswami said that DMK is a corporate company
திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

360 கோடி ரூபாய் மதிப்பிலான கொகைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கை, சி.பி.ஐ-யிடம் ஒப்படைத்து, இந்த வழக்கில் தொடர்புடைய அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க-வின் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை வலியுறுத்தினார்.

எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், 360 கோடி ரூபாய் மதிப்பிலான கொகைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் முதல்வர் மு.க. ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்த வழக்கை மாநில அரசு சி.பி.ஐ-க்கு மாற்றத் தவறினால், மத்திய அரசே சி.பி.ஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

தமிழ்நாடு போதைப்பொருள்களின் சர்வதேச மையமாக மாறுகிறதோ என்ற அச்சத்தை இந்த போதைப் பொருள் பறிமுதல் சம்பவம் ஏற்படுத்தியுள்ளது. இந்த போதைப் பொருள் சம்பவம் முதல்வருக்கு அவமானகரமானது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இந்த போதைப் பொருள் வழக்கு தொடர்பாக ஆளும் கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர் மற்றும் முன்னாள் கவுன்சிலர் என 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. அக்கட்சியின் மூத்த நிர்வாகிகளின் ஆதரவு இல்லாமல் அவர்களால் எப்படி இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட முடியும் என்று அ.தி.மு.க இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

அ.தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்ட அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துவதால் கோவை மாவட்டத்தில் இரண்டு தொழிற்பேட்டைகள் அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் ஓ. பன்னீர்செல்வம் கூறியிருப்பதாவது: முன்னாள் முதல்வர் ஜானகி ராமச்சந்திரனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ஜானகி அம்மாள் மற்றும் அ.தி.மு.க நிறுவனர் எம்.ஜி.ஆர் ஆகியோரின் வெண்கலச் சிலைகள் தி.நகர் ஆற்காடு தெருவில் உள்ள எம்ஜிஆர் நினைவு இல்ல வளாகத்தில் நிறுவப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Edappadi k palaniswami urges cocaine seizure case handed over to cbi

Best of Express