Advertisment

இலங்கையில் நடப்பது இங்கும் நடக்கும்: இ.பி.எஸ் எச்சரிக்கை

இன்னும் 46 அம்மாவசைகளில் திமுக ஆட்சி முடிவுக்கு வரும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
இலங்கையில் நடப்பது இங்கும் நடக்கும்: இ.பி.எஸ் எச்சரிக்கை

இன்னும் 46 அம்மாவசைகளில் திமுக ஆட்சி முடிவுக்கு வரும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பழனியில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் பேசிய அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திமுக அரசை கடுமையாக விமர்சித்தார். “ மக்கள் விரோத ஆட்சியை திமுக செய்து கொண்டிருக்கிறது. இதுபோன்ற ஆட்சி செய்தால், இலங்கையில் நடந்ததுபோல் தமிழகத்திலும் நிகழும். கிட்டதட்ட 14 அம்மாவாசைகள் சென்றுவிட்டது. இன்னும் 46 அம்மாவாசனைகள்தான் இருக்கிறது ஸ்டாலின் அவர்களே.  2024 நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் நடக்கும். அப்போது அதிமுக ஆட்சிக்கு வரும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் அதிமுகவில் இரட்டை தலைமை பிரச்சனை பெரிதாக வெடித்தது. இரண்டு பொதுக்குழுக்கள் நடைபெற்று இறுதியாக எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்படார். கட்சியிலிருந்து பன்னீர் செல்வம் நீக்கப்பட்டாலும், யார் அதிமுகவின் கட்சியின் உரிமையை பெறுவார்கள் என்ற குழப்பம் இன்னும் நீட்டித்து வருகிறது. மேலும் ஓபிஎஸ் அடிக்கடி தமிழக அரசை சில விஷயங்கள் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.  

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment