/indian-express-tamil/media/media_files/XNoGyneH4qUfdpsabpcQ.jpg)
பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து பிரிய இதுதான் காரணம் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சேலம் சங்ககிரியில் அதிமுக தொழில்நுட்ப நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை (பிப்.8,2024) நடந்தது. இந்தக் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல் அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், “மு.க. ஸ்டாலின் ஸ்பெயின் பயணத்தில் மக்களுக்கு சந்தேகம் உள்ளது.
அதேபோல் சென்னையில் நடைபெற்ற தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்பட வேண்டும். திமுக ஆட்சியில் அனைத்துத் துறைகளில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடைபெறுகிறது” என்றார்.
தொடர்ந்து, “மக்களின் பிரச்னைகளுக்கு முன்னுரிமை அளிப்பவர்களோடு அதிமுக தலைமையில் கூட்டணி அமையும்” என்றார்.
மேலும், பாஜக உடனான கூட்டணி பிரிவு குறித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “தமிழக மக்களின் பிரச்னைகளை அவர்கள் காது கொடுத்து கேட்பதில்லை; இதனால்தான் அந்தக் கூட்டணியில் இருந்து பிரிந்து வந்துவிட்டோம்” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.