scorecardresearch

4 மாவட்ட நிர்வாகிகளுடன் இ.பி.எஸ் அவசர ஆலோசனை: தலைமைக் கழகம் வருகிறாரா ஓ.பி.எஸ்?

இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வமும் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவார் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Edappadi Palaniswami held a consultation with AIADMK 4 district officials
எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் தொடங்கும் நிலையில், முதல் நாளான இன்று (மார்ச் 18) எடப்பாடி பழனிசாமி வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார்.
கடந்தாண்டு (2022) ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழுவில், எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார்.

விரைவில் அவரை பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யும் நடவடிக்கையும் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் நேற்றே தொடங்கிவிட்டன.
இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வமும் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவார் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

முன்னதாக பத்திரிகையாளர்களை சந்தித்த ஓ.பன்னீர் செல்வம், “எடப்பாடி பழனிசாமி பிக் பாக்கெட் அடிப்பதுபோல், பதவியை கைப்பற்ற துடிக்கிறார்” என விமர்சித்துள்ளார்.
இந்த நிலையில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடன் 4 மாவட்ட நிர்வாகிகள் சந்தித்தனர்.
இந்தச் சந்திப்பில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டுள்ளனர்.

தலைமைக் கழகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 19) ஓ.பி.எஸ் வரக்கூடும் என தகவல் பரவி இருக்கிறது. இதனால் எடப்பாடி பழனிசாமியின் இந்த ஆலோசனை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கொடுத்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Edappadi palaniswami held a consultation with aiadmk 4 district officials