/tamil-ie/media/media_files/uploads/2022/11/Edappadi-K-Palaniswami.jpg)
திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை திமுகவை கடுமையாக விமர்சித்தார்.
உதயநிதி அமைச்சராகிறார் என்ற கேள்விக்கு, திமுக ஒரு ‘கார்ப்பரேட் நிறுவனம்’ என்றார்.
திருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய பழனிசாமி, “திமுக தலைவர்களுக்குச் சொந்தக் குடும்பம் இல்லை. தமிழக மக்களுக்காக இறுதி மூச்சு வரை அயராது உழைக்கிறார்கள்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “திமுகவைப் பாருங்கள். அது குடும்பக் கட்சி. அது ஒரு கார்ப்பரேட் நிறுவனம். அ.தி.மு.க.,வில் இருந்து, எட்டு பேர், அந்த நிறுவனத்துக்கு சென்று, தற்போது அமைச்சர்களாகி உள்ளனர்.
கடினமாக உழைப்பவர்களை அந்தக் கட்சி மதிப்பதில்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது மகன் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினின் முடிசூட்டு விழாவை இன்னும் 3, 4 நாட்களில் நடத்த திட்டமிட்டுள்ளார். அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும்” என்றார்.
மேலும், அதிமுகவில் தான் ஒரு சாமானியர் கூட உயர் பதவிகளை அடைய முடியும் என்றார்.
முன்னதாக பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி உதயநிதி அமைச்சராக போகிறார் எனக் கூறினார் என்பது நினைவு கூரத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.