Advertisment

நீலகிரி ஆயுத தொழிற்சாலையில் வெடி விபத்து: 8 பேர் காயம்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே அருவங்காடு பகுதியில் உள்ள ஆயுதத் தொழிற்சாலையில் இன்று அதிகாலை ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 பெண்கள் உள்பட 8 பேர் காயமடைந்தனர்.

author-image
WebDesk
New Update
நீலகிரி ஆயுத தொழிற்சாலையில் வெடி விபத்து: 8 பேர் காயம்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே அருவங்காடு பகுதியில் உள்ள ஆயுதத் தொழிற்சாலையில் (நவம்பர் 19ஆம் தேதி - சனிக்கிழமை) இன்று அதிகாலை ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 பெண்கள் உள்பட 8 பேர் காயமடைந்தனர்.

Advertisment

தொழிற்சாலையில் காலை 8.20 மணியளவில் வெடிப்பு ஏற்பட்டதை அடுத்து, காயமடைந்த 8 பேரும் ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் என்று தொழிற்சாலையின் துணைப் பொது மேலாளர் டி.சங்கர் தெரிவித்தார்.

publive-image

இரண்டு தொழிலாளர்கள் கன்டோன்மென்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், வெடிச்சத்தத்தின் பாதிப்பினால் காது கேளாமை ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த மூன்று பேர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

கார்டைட் பிரிவில் ஏற்பட்ட வெடிவிபத்தின் போது தொழிலாளர்கள் இல்லாததால், கடுமையான காயங்கள் எதுவும் இல்லை என்று சங்கர் கூறினார்.

மாவட்ட மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் தொழிற்சாலைக்கு வந்தனர். இதையடுத்து வெடிவிபத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Fire Accident
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment