Advertisment

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு; தபால் வாக்கு கேட்டு வந்த அதிகாரிகளை திருப்பியனுப்பிய மக்கள்

மக்களவைத் தேர்தலைப் புறக்கணிக்க போவதாக அறிவித்த, ஏகனாபுரம் மக்கள் தபால் வாக்குக்களிப்பதற்கு ஏற்பாடு செய்ய வந்த தேர்தல் அதிகாரிகளை ஏகனாபுரம் மக்கள் திருப்பி அனுப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
A Parandur Rep

தபால் வாக்குக்கள் பெற வந்த தேர்தல் அதிகாரிகளை ஏகனாபுரம் மக்கள் திருப்பி அனுப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Representational photo: x/ @SaveParandur

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00
பரந்தூர் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மக்களவைத் தேர்தலைப் புறக்கணிக்க போவதாக ஏகனாபுரம் மக்கள் அறிவித்தனர். இதையடுத்து, தபால் வாக்குக்கள் பெற வந்த தேர்தல் அதிகாரிகளை ஏகனாபுரம் மக்கள் திருப்பி அனுப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisment
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. வாக்குப் பதிவுக்கு இன்னும் 8 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்கள் ஒரு பக்கம் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள் என்றால், மறுபுறம், தேர்தல் நடத்தும் அதிகாரிகள், தேர்தல் அலுவலர்கள், கண்காணிப்பு குழுவினர், பறக்கும் படையினர் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த மக்களவைத் தேர்தலில், 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தபால் மூலம் வாக்களிக்கும் வசதியை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.  அதன்படி, வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களிக்க இயலாத 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளிடம் தபால் வாக்குகளை பெறும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஶ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியில் தபால் வாக்குப்பதிவு பணியில் 15 குழுவினர், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்று தபால் வாக்கு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட தேர்தல் நிர்வாகத்தின் உத்தரவுப்படி, 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்து வாக்களிக்கும் விதமாக விண்ணப்ப படிவங்கள் வழங்கப்படுகிறது.
அதன்படி, ஏப்ரல் 8-ம் தேதி திங்கள்கிழமை முதல் தபால் வாக்குப்பதிவு சீட்டுக்களை நேரடியாக வீட்டுக்கு சென்று அளித்து வாக்குகளைப் பெறும் பணி நடைபெற்று வருகிறது. ஸ்ரீபெரும்புத்தூரில் 5 குழுவினரும் , ஆலந்தூரில் 4 குழுவினரும் , காஞ்சிபுரம் மற்றும் உத்திரமேரூர் தலா 3 குழுவினரும் என மொத்தம் 15 குழுக்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதே நேரத்தில், சென்னைக்கு இரண்டாவது விமான நிலையமாக பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு ஏகனாபுரம் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், அரசு, பரந்தூர் விமான நிலையம் அமைப்பதில் உறுதியாக உள்ளது. பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 624 நாட்களை தாண்டி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஏகனாபுரம் மக்கள், தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக, இந்த நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்தனர்.
இந்நிலையில், ஏகனாபுரம் மக்கள், மக்களவைத் தேர்தலைப் புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ள நிலையில், ஏகானபுரம் கிராமத்திற்கு தபால் வாக்கு பெறுவதற்காக அதிகாரிகள் சென்றனர். ஆனால், அங்கே மூத்த குடிமக்கள் யாரும் வாக்களிக்க தயாராக இல்லை என கூறி பொதுமக்கள் அதிகாரிகளை திருப்பி அனுப்பினர். 
ஏகனாபுரம் கிராமத்தில் 18 தபால் வாக்குகள் உள்ள நிலையில், வாக்களிக்க ஒருவர் கூட தயாராக இல்லை என்று மூத்த குடிமக்கள் அதிகாரிகளை திருப்பியனுப்பினர். தபால் வாக்கு பெற வந்த அதிகாரிகளை ஏகனாபுரம் கிராம மக்கள் திருப்பி அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதே நேரத்தில், இந்த மக்களவைத் தேர்தலில், அனைத்து அரசியல் கட்சியினரும் எல்லா பகுதிகளிலும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டாலும், காஞ்சிபுரம் தொகுதியில், பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் கிராமங்களில் மட்டும் வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்க செல்லவில்லை என்பது தெரியவந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
parandur airport
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment