தமிகத்தில் வரும் மே மாதம் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுக –வை நிராகரிப்போம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டத்தை நடத்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மேலும் தான் பிரச்சாரத்திற்கு செல்லும் இடமெங்கிலும் ஆளும் அதிமுக அரசை குறை கூறி வரும் ஸ்டாலின் ஆளும் கட்சி மீது அடுக்கடுக்கான ஊழல் புகார்களை சுமத்தி வருகிறார்.
இந்நிலையில், தனது பிரச்சாரத்தின் அடுத்தகட்டமாக திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள அம்மையார்குப்பம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்றார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட முருக பக்தர்கள் திருத்தணி முருகனின் பெயரில் வெள்ளி வேல் ஒன்றை திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு பரிசாக வழங்கியுள்ளனர். முருகனின் ஆறு படை வீடுகளில் 5-வது வீடான திருத்தணியில் இருந்து கடந்த நவம்பர் மாதம் பாஜக சார்பில் வேல்யாத்திரை நடத்தப்பட்டது. இந்த வேல் யாத்திரைக்கு திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், தற்போது திமுக தலைவருக்கே வேல் பரிசாக கொடுக்கப்பட்டது திமுக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக திமுக கூட்டணி கட்சிகள் எப்போதும இந்து கடவுளை விமர்சித்து வரும் நிலையில், திமுக தலைவருக்கு வேல் பரிசளிக்கப்பட்டது வரும் சட்டமன்ற தேர்தலில் வாக்கு வங்கியை அதிகரிக்கும் முயற்சியா என்பது குறித்து பெரும் சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் ஸ்டாலினுக்கு வேல் பரிசளிக்கப்பட்டது தொடர்பாக ட்விட்டரில் பலவிதமான கருத்துக்களை பதிவாகி வருகிறது.
நேற்று கருப்பர்கூட்டத்தை வைத்து கந்த சஷ்டியையும் தமிழ் கடவுள் முருகனையும் அவமதித்து இந்துக்களை கொதிப்படைய செய்த நீங்கள்
இன்று வேல் தூக்கி நின்றாலும் சரி காவடி எடுத்தாலும் சரி வேப்பிலை கட்டி மண்சோறு சாப்பிட்டாலும் சரி என்றுமே நீங்கள் இந்துக்களின் விரோதிதான் ஸ்டாலின். pic.twitter.com/vZpUYkvOQQ
— Gayathri Raguramm (@BJP_Gayathri_R) January 23, 2021
'வேல்' ஆயுதம் என சொன்னவர்கள் இன்று அந்த ஆயுதத்தை ஏந்துவது ஏன்?'வேல் அரசியல்' செய்கிறார் பாஜக தலைவர் @Murugan_TNBJP என கூறியவர் அரசியலை துறந்து விட்டாரா?முருகனின்'வேல்'காக்கவும் செய்யும்.தாக்கவும் செய்யும்.பாஜகவின் வேல் திமுகவை தாக்கியதால்,திமுகவை காக்க வேல் பிடித்தார் @mkstalin pic.twitter.com/rUiP6CY5Qd
— Narayanan Thirupathy (@Narayanan3) January 23, 2021
.இன்று கடவுளே இல்லை என்று சொல்லும் ஸ்டாலின் வேல் எடுக்கும் நிலைக்கு முருகன் வைத்துவிட்டார்..!.(கந்தவேல் முருகனுக்கு அரோகரா) pic.twitter.com/3Wwbrrm47Z
— Chowkidar Srinivasan (@srinivasankmu) January 23, 2021
வேல் யாத்திரையின் வெற்றி, திரு. ஸ்டாலின் அவர்களையும் வேல் எடுக்க வைத்திருக்கிறது.#வெற்றிவேல்_யாத்திரை pic.twitter.com/uRgzysnMLy
— anandtbjp (@anandtbjp1) January 23, 2021
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.