/tamil-ie/media/media_files/uploads/2023/07/eps.jpg)
இ.பி.எஸ் அறிவித்த நிர்வாகிகளுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்
அதிமுக பொதுச் செயலாளராக இ.பி.எஸ் தேர்வு செய்யப்பட்டதை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. தொடர்ந்து இ.பி.எஸ் நியமித்த நிர்வாகிகளை அங்கீகரித்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.
அதிமுகவில் இரட்டை தலைமை பிரச்சனை ஒரு வருடங்களுக்கு மேலாக தொடர்ந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற பொதுக்குழுவில், அதிமுகவின் பொதுச் செயலாளராக இ.பி.எஸ் நியமிக்கப்பட்டார். ஓ.பி.எஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் கட்சியின் பொதுச் செயலாளராக இ.பி.எஸ்-ஐ அங்கீகரிக்க வேண்டும் என்று அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதனையடுத்து கடந்த ஏப்ரல் 20ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், இ.பி.எஸ் அதிமுகவின் பொதுச் செயலாளராக அங்கீகரித்து உத்தரவிட்டது. மேலும் அதிமுகவின் சட்டவிதி திருத்தம் , நிர்வாகிகள் மாற்றம் போன்றவற்றை ஏற்பதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
இ.பி.எஸ் பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பின்னர். அதிமுக அமைப்பு ரீதியாக புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இது தொடர்பாக இ.பி.எஸ் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பினார். இதில் கட்சியின் புதிய மாற்றங்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களின் பெயர் பட்டியல் ஆகியவற்றை இணைத்திருந்தார்.
இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளராக இ.பி.எஸ் தேர்வு செய்யப்பட்டதை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததுடன், இ.பி.எஸ் நியமித்த நிர்வாகிகளை அங்கீகரித்து இணையதளத்தில் பதிவேற்றும் செய்துள்ளது. நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி இ.பி.எஸ் தரப்பு அளித்த ஆவணங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது. இதன் மூலம் பொதுச்செயலாளர் இ.பி.எஸ், அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் என தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.