/tamil-ie/media/media_files/uploads/2021/03/election-commission-759-3.jpg)
Election Commission of India orders Suspension of SP Kannan Tamil News : செங்கல்பட்டு முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளர் டி.கண்ணனை உடனடியாக இடைநீக்கம் செய்யுமாறு இந்தியத் தேர்தல் ஆணையம் கடந்த செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து அவர், வாக்கெடுப்பு கண்காணிப்புக் குழுவின் அறிவுறுத்தல்களின்படி தேர்தல் அல்லாத பணிக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.
சிறப்பு டி.ஜி.பி பதவியில் இருக்கும் ஒரு அதிகாரியால் பெண் எஸ்.பி ஒருவர் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்ட வழக்கில் கண்ணனின் பெயர் கண்டறியப்பட்டது. இந்நிலையில் தமிழக தலைமை செயலாளருக்கு எழுதிய கடிதத்தில், தேர்தல் ஆணைய செயலாளர் மலாய் மல்லிக், புதன்கிழமை காலை 11 மணிக்குள் இடைநீக்க உத்தரவைப் பின்பற்றி அறிக்கை அளிக்குமாறு அழைப்பு விடுத்தார்.
இதனைத் தொடர்ந்து கண்ணனை சென்னை வணிக குற்ற விசாரணை-சி.ஐ.டி பிரிவில் எஸ்.பி பதவியளிக்க உள்துறை உத்தரவிட்டது. சென்னையின் வடக்கு, போக்குவரத்து, துணை ஆணையர் பதவியிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரி இ.சுந்தரவதனம், செங்கல்பட்டு எஸ்.பி பதவியில் அமர்த்தப்பட்டார். மார்ச் 8-ம் தேதி கண்ணனை இடமாற்றம் செய்ய உத்தரவிட்ட தேர்தல் ஆணையம், மாநில உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையைத் தமிழகத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரி அனுப்பியதாகக் கூறப்படுகிறது. அதில், இந்த அதிகாரி தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடை சட்டத்தில் கீழ் குற்றவியல் கிளை-சிஐடியால் விசாரிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
வழக்கின் ஈர்ப்பு மற்றும் தமிழக உள்துறை துறையின் அறிக்கையைக் கருத்தில் கொண்டு, டி. கண்ணனை உடனடியாக இடைநீக்கம் செய்ய வேண்டும் என்றும் அவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கைகள் தொடங்கப்பட வேண்டும் என்றும் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது என மல்லிக் கூறுகிறார். ஒரு உயர் அதிகாரி மீது புகார் அளிக்கப் பெண் எஸ்.பி. சென்னை செல்வதைத் தடுக்க முயன்றதாகக் கண்ணன் மீது குற்றம் சாட்டப்பட்டது. பின்னர் அவர் உயர் அதிகாரியின் அறிவுறுத்தலின் பேரில் செயல்பட்டதாகக் கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.