Advertisment

உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட தங்க நகைகள் பறிமுதல் : விராலிமலை அருகே தேர்தல் பறக்கும்படி அதிரடி

விராலிமலை அருகே பூதகுடி சுங்கச்சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

author-image
WebDesk
New Update
Gold Smug

பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகள்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கரூர் எம்பி தொகுதிக்குட்பட்ட விராலிமலை அருகே உள்ள பூதகுடி சுங்கச்சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில், திண்டுக்கல் நிலக்கோட்டை அருகே உள்ள மாவூத்தம்பட்டியை சேர்ந்த ஆனந்தன்(34) மற்றும் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர் உள்பட 4 பேர் இருந்தனர்.

Advertisment

இந்த வாகனத்தில் திருச்சியில் உள்ள தனியார் கோல்டு நிதி நிறுவனத்திலிருந்து சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள ஒரு பிரபல நகைகடைக்கு 1206.33 கிலோ ஆபரண தங்கம் உரிய ஆவணங்களின்றி எடுத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர் இலுப்பூர் ஆர்.டி.ஓ தெய்வநாயகியிடம் ஒப்படைத்தனர்.

ஆர்.டி.ஓ தெய்வநாயகி, ஆர்.டி.ஓ உதவியாளர் பழனிச்சாமி, தாசில்தார் சூரியபிரபு ஆகியோர் உரிய ஆவணங்களை காட்டி விட்டு தங்கத்தை வாங்கி செல்லுமாறு அறிவுறுத்தியதோடு, பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகளை இலுப்பூர் அரசு கருவூலத்திற்கு அனுப்பி வைத்தனர்.

க.சண்முகவடிவேல்           

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Tiruchirapalli
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment