Advertisment

Tamil News Live: நாளை வாக்கு எண்ணிக்கை - பரபரப்பில் அரசியல் கட்சியினர்!

Tamil News Live: தமிழகத்தில் காலியாக இருக்கும் சட்டமன்ற தொகுதிகளுக்குமான இடைத்தேர்தலும் நடந்தது. 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Lok Sabha elections 2019 LIVE Updates

Lok Sabha elections 2019 LIVE Updates

Tamil News Live: இந்திய மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. இதில் கடந்த ஏப்ரல் 18-ம் தேதி தமிழகத்தில் உள்ள 38 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் நடந்தது.

Advertisment

பணப்புழக்கம் காரணமாக வேலூர் மக்களவைத் தொகுதியின் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அதோடு சேர்த்து தமிழகத்தில் காலியாக இருக்கும் சட்டமன்ற தொகுதிகளுக்குமான இடைத்தேர்தலும் நடந்தது.

Tamil News Live: Latest Tamil News Today!

இதன் இறுதி கட்டமாக மே 19-ம் தேதி, சூலூர், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்குமான இடைத்தேர்தல் நடைபெற்றது.

இதையடுத்து நாளை (மே 23) வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால், அரசியல் வட்டாரத்தில் பரபரப்புகளுக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது.

Live Blog

Tamil News Live: Latest Tamil News Today!

தமிழகத்தில் இன்றைய முக்கிய செய்திகள்!



























Highlights

    15:15 (IST)22 May 2019

    வாக்கு எண்ணிக்கை

    நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார். 

    14:09 (IST)22 May 2019

    கோரிக்கை நிராகரிப்பு

    ஒப்புகை சீட்டு விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்தது தேர்தல் ஆணையம்

    13:21 (IST)22 May 2019

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு

    விரிவான விசாரணை நடத்த வேண்டும் என ராஜராஜன் என்பவர் கொடுத்த புகார் மனுவை முடித்து வைத்தது தேசிய மனித உரிமை ஆணையம்

    12:52 (IST)22 May 2019

    மறு வாக்குப்பதிவு நிராகரிப்பு

    வாக்குகளுக்கும், ஒப்புகைசீட்டுக்கும் வித்தியாசம் வந்தால் மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிடகோரிய முறையீடு நிராகரிப்பு

    12:20 (IST)22 May 2019

    அமைச்சரவையில் இடம் பிடிப்பேனா?

    தேர்தல் முடிவுகள் வந்த பின்னர் அமைச்சரவையில் சேருவது குறித்து கட்சி தலைமை முடிவு எடுக்கும் - எல்.கே.சுதீஷ் 

    12:05 (IST)22 May 2019

    தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் போராட்டம்

    வரும் 27-ம் தேதி முதல் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். நீர்நிலைகள், விவசாய விளை நிலங்களில் தண்ணீர் எடுக்கக்கூடாது என்ற நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து தமிழகம் முழுவதும் உள்ள 15,000 தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தகவல். 

    11:48 (IST)22 May 2019

    பொன்பரப்பியில் மறு வாக்குப்பதிவு இல்லை

    பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்தவேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்தது சென்னை உயர்நீதிமன்றம். நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறும்சூழலில் மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    11:47 (IST)22 May 2019

    பொன்பரப்பியில் மறு வாக்குப்பதிவு இல்லை

    பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்தவேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்தது சென்னை உயர்நீதிமன்றம். நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் சூழலில் மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    11:40 (IST)22 May 2019

    ஆலோசனை ரத்து

    வாக்கு எண்ணும் பணிகள் குறித்து 10 மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா காணொலிக்காட்சி மூலம் நடத்தவிருந்த ஆலோசனை ரத்துசுனில் அரோரா

    11:25 (IST)22 May 2019

    வாக்கு எண்ணும் மையம் ஆய்வு

    சென்னை ராணிமேரி கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆய்வு

    Tamil News Live: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாவதை ஒட்டி, அனைத்து அரசியல் கட்சிகளும் பரபரப்பாக இருக்கின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக தலைமையிலான கூட்டணியும், அதிமுக தலைமையிலான கூட்டணியும் மக்களிடையே அதிக எதிர்பார்ப்பை கிளப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.
    Tamil Nadu Tamil News General Election
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment