/indian-express-tamil/media/media_files/0O0ROfhCEy5RO1Y9BCud.jpg)
கோவை-பொள்ளாச்சி சாலையில், சுந்தராபுரம் அண்ணாசிலை பகுதியை அடுத்து காந்திநகர் குடியிருப்பு உள்ளது. இங்கு உள்ள 7-வது தெருவில் திடீரென மின் கம்பம் சாய்ந்து மின் கம்பிகள் அறுந்து விழுந்து உள்ளன.
அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த வாகன ஓட்டி ஒருவர் மீது மின் கம்பிகள் விழுந்ததில் நிலை தடுமாறி அவர் கீழே விழுந்தார். இதில் அவருக்கு காயங்கள் ஏற்பட்டது. வாகன ஓட்டியின் சத்தம் கேட்டு வெளியே வந்த அப்பகுதி மக்கள் அவரை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
திடீரென மின் கம்பம் சாய்ந்து பைக்கில் சென்றவர் மீது விழுந்த மின்கம்பிகள்: அதிர்ச்சி சி.சி.டி.வி காட்சிகள்#Coimbatore | @TANGEDCO_Offclpic.twitter.com/BwB01dNFJb
— Indian Express Tamil (@IeTamil) June 27, 2024
பின்னர் இது குறித்து மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு மின் கம்பங்கள் சரி செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர். இந்த நிலையில் மின்கம்பிகள் அறுந்து இரு சக்கர வாகன ஓட்டியின் மீது விழும் அதிர்ச்சி ஏற்படுத்தும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செய்தி: பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.