ரெயில்களின் பயண நேரத்தை குறைப்பதற்காகவும், விபத்து போன்றவைகள் நடைபெறாமல் தவிர்ப்பதற்காகவும் தஞ்சை-திருச்சி பொன்மலை இடையே 49 கிலோ மீட்டர் தூரத்திற்கு இருவழி பாதையாக மாற்றியது தென்னக ரயில்வே. மேலும், திருச்சி-தஞ்சை- காரைக்கால்- நாகை-வேளாங்கண்ணி இடையிலான 156 கி. மீ. தொலைவுள்ள ரெயில் பாதையையும் மின்மயமாக்கத் திட்டமும் விரைவாகப்பட்டது.
இந்நிலையில், திருச்சி-தஞ்சாவூர் இடையிலனா சிறப்பு சோதனை ஓட்டத்தில் ஓடிய மின்சார ரயில் 110 கி.மீ வேகத்தில் சீறி பாய்ந்தது. பகல் 12.20 மணிக்கு தஞ்சாவூர் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட ரயில் மதியம் 1 மணியளவில் திருச்சி ரயில் நிலையத்துக்கு சென்றடைந்தது.
டீசல் வண்டியைக் காட்டிலும் எலெக்ட்ரிக் ரயிலின் வேகம் அதிவேகமாக இருக்கும் என்பது குறிப்பிடத் தக்கது. இந்த முயற்சியால், திருச்சி-தஞ்சாவூர் இடையிலான ரயில் போக்குவரத்து நேரம் கணிசமான முறையில் குறைக்கப்பட்டதுடன், தொழில்செய்வோருக்கும் , அன்றாட மக்களுக்கும் இது பெரும் உதவியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.