/tamil-ie/media/media_files/uploads/2023/01/POWER-1-2-2-3.jpg)
வேளாண், குடிசை இணைப்புகள், 100 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட திட்டங்கள் தொடர்கிறது.
தமிழ்நாடு அரசு மின் கட்டண உயர்வு குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வீட்டு இணைப்புகளுக்கு எவ்வித கட்டணம் உயர்வும் கிடையாது. தொடர்ந்து, வேளாண், குடிசை இணைப்புகள், 100 யூனிட் இலவச மின்சாரம், கைத்தறி, விசைத்தறிகள் போன்ற திட்டங்களுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் தொடரும்.
தொடர்ந்து, வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கு யூனிட் 13 பைசா முதல் 21 பைசா வரை மின் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தமிழ்நாட்டில் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணம் கடந்த செப்டம்பர் மாதம் உயர்த்தப்பட்டது. புதிய மின் கட்டணத்தின்படி, வீடுகளுக்கான மின்சாரக் கட்டணம் 12 சதவீதம் முதல் 52 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது.
இந்நிலையில், இம்முறை மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கு யூனிட் 13 பைசா முதல் 21 பைசா வரை மின் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.