New Update
/indian-express-tamil/media/media_files/2024/10/17/mop5VeIF643r9MhHEHQS.jpg)
சம்பவ இடத்திற்கு மூன்று வாகனங்களில் வந்த 10க்கும் மேற்பட்ட வனத் துறையினர் யானையை வனத்திற்குள் விரட்டினர்.
கோவை, தொண்டாமுத்தூர் அருகே உள்ள பூண்டி, வெள்ளியங்கிரி மலை அடிவாரப் பகுதியில் உள்ளது செம்மேடு கிராமம். இங்கு ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக முகாமிட்டு உள்ள காட்டு யானைகள் ஊருக்குள் மற்றும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.
இதனை கண்காணித்து ஊருக்குள் நுழைவதை தடுத்து வனப் பகுதிக்குள் விரட்ட வனத் துறையினர் பல்வேறு குழுக்களை அமைத்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் மீண்டும், மீண்டும் காட்டு யானைகள் புகுந்து அப்பகுதியில் சேதத்தை ஏற்படுத்தி வருவது தொடர் கதையாகி உள்ளது.
இந்நிலையில் உணவு தேடி நேற்று இரவு 11 மணி அளவில் செம்மேடு கிராமத்தில் புகுந்த ஒற்றை காட்டு யானை அங்கு இருந்த கடையை உடைத்து 25 கிலோ அரிசி முட்டையை சாக்குப் பையுடன் அசால்டாக எடுத்து உண்டது.
'எனக்கும் பசிக்கும்ல' ; மளிகை கடையில் புகுந்து அரிசியை சாப்பிட்டு சென்ற யானை: வீடியோ வைரல்#Elephant pic.twitter.com/tkKYEkoGBH
— Indian Express Tamil (@IeTamil) October 17, 2024
அதனை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்தார். அதில் அங்கு இருந்த பெண் ஒருவர் சாமி போயிடு, போ, போ என கையெடுத்து கும்பிடும் காட்சியும் பதிவாகி உள்ளது. அந்த காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் இதுகுறித்து அப்பகுதி மக்கள் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு மூன்று வாகனங்களில் வந்த பத்துக்கு மேற்பட்ட வனத் துறையினர். நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின்னர் அந்த ஒற்றைக் காட்டு யானையை வனப் பகுதிக்குள் விரட்டினர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.