Advertisment

சென்னையில் 11 வயது சிறுமிக்கு 6 மாதங்களாக பாலியல் வன்கொடுமை; 4 பேரிடம் போலீஸ் விசாரணை

புகாரின் பேரில், அப்பகுதியைச் சேர்ந்த 4 பேரிடம் மகளிர் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
Pocso rep

சென்னை வில்லிவாக்கத்தில் 11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சென்னை வில்லிவாக்கத்தில் 11 வயது சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த 5-க்கும் மேற்பட்டோர் 6 மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisment

வில்லிவாக்கத்தில் 11 வயது சிறுமியை, அதே பகுதியைச் சேர்ந்த 5-க்கும் மேற்பட்டோர், 6 மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நடைபெற்றுள்ளது. சிறுமியின் தாய் மற்றும் தந்தை மதுபோதைக்கு அடிமையாகி சிறுமியை சரியாக பராமரிக்காமல் இருந்துள்ளனர். இதனால், சிறுமி பாட்டியின் கவனிப்பில் வளர்ந்துள்ளார். 

சிறுமியை உறவினர்கள் மற்றும் அதே பகுதியை சேர்ந்த 5-க்கும் மேற்பட்டோர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். சிறுமியின் உடல்நிலை மோசமடைந்ததால் சிறுமியிடம் பாட்டி விசாரித்துள்ளர். அப்போது, சிறுமி கூறிய தகவலின் அடிப்படையில், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி இருப்பதை அறிந்த பாட்டி அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்டு,  சிறுமி குறிய தகவலின் அடிப்படையில், வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பாட்டி புகார் அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் அப்பகுதியை சேர்ந்த 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமியை மீட்ட போலீசார் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment