/indian-express-tamil/media/media_files/8QE4kA1S6kdScqk4E3QG.jpg)
ADSP Velladurai suspended
என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் என அறியப்படும், ஏ.டி.எஸ்.பி. வெள்ளத்துரை இன்று பணி ஓய்வு பெற இருந்த நிலையில் அவரை பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
2013ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியில் ராமு (26) என்கிற கொக்கி குமார், போலீஸ் காவலில் இருந்த போது மரணமடந்த வழக்கில் வெள்ளதுரைக்கு தொடர்பு இருப்பதாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தின் வல்லநாட்டைச் சேர்ந்த வெள்ளத்துரை, தமிழக காவல்துறையில் கடந்த 1997 ஆம் ஆண்டு உதவி ஆய்வாளராக பணிக்கு சேர்ந்தார். இவரின் 25 ஆண்டுபணி காலத்தில் 10க்கும் மேற்பட்ட என்கவுண்டர்களை செய்து இருக்கிறார்.
2003-ல் சென்னையில் பிரபல ரவுடி அயோத்தி குப்பம் வீரமணியை, வெள்ளத்துரை என்கவுண்ட்டர் செய்தார்.
வீரப்பனைச் சுட்டுக் கொன்றதால் இரட்டைப் பதவி உயர்வு பெற்று கூடுதல் எஸ்.பி.யானவர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us