Advertisment

லஞ்சம் வாங்கிய விவகாரம்: அங்கித் திவாரியிடம் அமலாக்கத்துறை விசாரணை

திண்டுக்கல் மருத்துவரிடம் அங்கித் திவாரி லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் , அங்கித் திவாரியிடம் அமலாக்கத்துறை விசாரணையை தொடங்கி உள்ளது.

author-image
WebDesk
New Update
sasa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

திண்டுக்கல் மருத்துவரிடம் அங்கித் திவாரி லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் , அங்கித் திவாரியிடம் அமலாக்கத்துறை விசாரணையை தொடங்கி உள்ளது.

Advertisment

திண்டுக்கல் மருத்துவரிடம் இருந்து ரூ.20 லட்சம்  பெற்ற விவகாரத்தில் தமிழ்நாடு லட்ச ஒழிப்புதுறை அதிகாரிகள் அமலாக்கத்துறை அதிகாரி திவாரியை கடந்த டிசம்பர் 1ம் தேதி கைது செய்தனர்.

இதைத் தொடர்ந்த அங்கித் திவாரி தரப்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.  இந்த மனு கடந்த 19ம் தேதி  நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு  வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் ஜாமீன் மனுவின் மீதான தீர்ப்பை கடந்த 20ம் தேதி வழங்கபப்டும் என்று தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தனர்.

இதனிடையே மதுரை அமலாக்கத்துறை  அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்ப போலீசார்  சோதனை நடத்தினர். அந்த  சயமத்தில்  அவர்களை  அமலாக்கத்துறை  அதிகாரிகள் பணி செய்ய விடாமல் தடுத்ததாக, தல்லாகுளம்  போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. அந்த புகாரின் பெயரில் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு  எதிராக  வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் லஞ்சம் வாங்கிய புகாரில் கைதான  அங்கித் திவாரியிடம் சட்டவிரோத  பணப்பிமாற்றம் என்ற அடிப்படையில்,  அமலாக்கத்துறை விசாரணை தொடங்கியது. அவர் மீதான குற்றச்சாட்டு குறித்து துறை ரீதியாக விசாரணை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment