/indian-express-tamil/media/media_files/G3cxB2qN3nvSE2cweB2x.jpg)
செட்டிநாடு குழுமத்தின் குழும நிறுவனமான சவுத் இந்தியா கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிட்டெடின் ரூ.298.21 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தற்காலிகமாக முடக்கியுள்ளது. விசாகப்பட்டினம் துறைமுகத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு நிலக்கரி கையாள்வதில் 900 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றதில் இந்த நிறுவனத்திற்கு தொடர்பு இருப்பதால், அமலாக்கத்துறை சொத்துகளை முடக்கி உள்ளது.
விசாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து நிலக்கரிப் போக்குவரத்திற்காக அதிகப் பணம் பெற்றுக்கொண்டு தமிழக மின்வாரியத்தை எஸ்.ஐ.சி.பி.எல் நிறுவனம் பல நூறு கோடிகளை ஏமாற்றியதாகக் கூறப்படும் ஊழல் தொடர்பாக தமிழக மின் வாரியம் மற்றும் சவுத் இந்தியா கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிட்டெடின் முன்னாள் அதிகாரிகள் மீது அமலாக்கத்துறை விசாரணையைத் தொடங்கியது.
கடலூர் மாவட்டத்தில் எஸ்.ஐ.சி.பி.எல் நிறுவனத்திற்கு சொந்தமான 300 ஏக்கருக்கும் அதிகமான நிலம் அமலாக்கத்துறையால் இணைக்கப்பட்டுள்ளதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. ஏப்ரல் 2023ம் ஆண்டு , எஸ்.ஐ.சி.பி.எல் வங்கிக் கணக்குகளில் நிலையான வைப்புத் தொகையாக இருந்த ரூ.360 கோடியை அமலாக்கத்துறை முடக்கியது.
2001 ஆம் ஆண்டில், வைசாக் துறைமுகத்தில் நிலக்கரியைக் கையாளும் ஒப்பந்தம், ஐந்து மாதங்களுக்கு மட்டுமே எஸ்.ஐ.சி.பி.எல் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.
இருப்பினும், அந்த டெண்டரில் ஏலம் திறக்கப்படுவதற்கு முன்பே, மற்றொரு நிறுவனம் நீதிமன்றத்தில் ஒரு சிவில் வழக்கைத் தாக்கல் செய்தது, அது 2019 வரை கால அவகாசம் பெற்றது.
2011-12 முதல் 2018-19 வரையிலான காலப்பகுதியில் எஸ்.ஐ.சி.பி.எல் ரூ.217.31 கோடியை விசாகப்பட்டினம் துறைமுக அறக்கட்டளைக்கு வரியாக செலுத்தியுள்ளது, அதேசமயம் தமிழக மின்வாரியம் ரூ.1126.10 கோடியை எஸ்.ஐ.சி.பி.எல்-க்கு லெவியாக வழங்கியது. இதனால் தமிழக மின்வாரியத்திற்கு ரூ.908 கோடி இழப்பு ஏற்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us