இ.டி. சோதனை சட்டவிரோதமானது அல்ல: டாஸ்மாக் வழக்கில் ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு!

''டாஸ்மாக் நிறுவனத்தில் சோதனை நடத்தியது சட்டவிரோதம் அல்ல'' எனக் கூறி அமலாக்கத்துறைக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

''டாஸ்மாக் நிறுவனத்தில் சோதனை நடத்தியது சட்டவிரோதம் அல்ல'' எனக் கூறி அமலாக்கத்துறைக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ED

அமலாக்கத்துறை சோதனை சட்டவிரோதமானது அல்ல: டாஸ்மாக் வழக்கில் ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு!

சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை அமலாக்க துறை சோதனை நடத்தியது. மாநில அரசின் அனுமதியின்றி நடத்தப்பட்ட சோதனையை சட்ட விரோதமானது என, அறிவிக்கக் கோரியும், விசாரணை என்ற பெயரில் அதிகாரிகளை துன்புறுத்த தடை கோரியும், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தியது. சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சிலர் ஈடுபட்டதாக தகவல் கிடைத்ததால் சோதனை நடத்தினோம் என அமலாக்கத்துறை தெரிவித்து இருந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் அமர்வு இன்று (ஏப்ரல் 23) தீர்ப்பு அளித்தனர்.

அமலாக்கத்துறைக்கு எதிராக தொடரப்பட்ட தமிழக அரசின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். ''டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை சட்டவிரோதம் அல்ல. அமலாக்கத்துறை நடத்திய சோதனை தேச நலனுக்கானது.

நள்ளிரவு சோதனை நடத்தியபோது ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியதை ஏற்க முடியாது'' என நீதிபதிகள் தெரிவித்தனர். அதுமட்டுமின்றி, சோதனை அடிப்படையில் தொடர்ந்து விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

தமிழ்நாடு அரசு மீது நீதிமன்றம் அதிருப்தி!

டாஸ்மாக் நிறுவனத்தின் பெண் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை கேடயமாகப் பயன்படுத்தி, அமலாக்கத்துறை விசாரணையை தமிழ்நாடு அரசு தடுக்க முயல்கிறது. கட்டாயப்படுத்தி கையெத்து பெற்றார்கள், வலுக்கட்டாயமாக ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன போன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ஏற்க முடியாது. தங்கள் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்பட்டிருந்தால், தனிப்பட்ட அதிகாரிகள் வழக்கு தாக்கல் செய்யலாம். தமிழ்நாடு அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் ஏன் வழக்கு தாக்கல் செய்தன? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அமலாக்கத்துறை விசாரணைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில், இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதோ என்ற கேள்வி எழுகிறது. கூட்டாட்சி தத்துவத்தை மக்களின் மேம்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டுமே தவிர தேசத்திற்கு எதிரான குற்றம் குறித்த விசாரணையை தடுக்க பயன்படுத்தக் கூடாது என்று நீதிபதிகள் கூறினர்.

ED Tasmac Chennai High Court

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: