சட்டவிரோத பணபரிமாற்ற புகார்: சென்னையில் 5 இடங்களில் இ.டி. சோதனை

சென்னை சைதாப்பேட்டை, தி. நகர், விருகம்பாக்கம், கோயம்பேடு, அசோக் நகர் ஆகிய பகுதியில் உள்ள தனியார் மருத்துவ உபகரண நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை சைதாப்பேட்டை, தி. நகர், விருகம்பாக்கம், கோயம்பேடு, அசோக் நகர் ஆகிய பகுதியில் உள்ள தனியார் மருத்துவ உபகரண நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
enforcement raid

சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

சென்னை சைதாப்பேட்டை, தி. நகர், விருகம்பாக்கம், கோயம்பேடு, அசோக் நகர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அசோக் நகரில் உள்ள பில்ரோத் மருத்துவமனை உரிமையாளர்கள் வீட்டிலும், சென்னை சாலிகிராமத்தில் பாண்டியன் என்பவர் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோன்று விருகம்பாக்கத்தில் முன்னாள் மாசுக்கட்டுப்பாட்டு கண்காணிப்பு அதிகாரி வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisment

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் சோதனை நடைபெறுவதாகவும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் அதன் அடிப்படையில் சோதனை நடைபெறுவதாகவும் முதல்கட்டத் தகவல் வெளியாகி உள்ளன. மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டுள்ளனர்.

இதற்கு முன்னதாக, அதிமுக ஆட்சிக்காலத்தில் வருமானத்தை விட அதிக அளவு லஞ்சம் வாங்கி சொத்து சேர்த்ததாக பாண்டியன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கடந்த 2021ல் அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். தற்போது அமலாக்கத்துறையின் சோதனை நடத்திவருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chennai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: