Advertisment

எண்ணூர் வாயுக் கசிவு: உர ஆலையை தற்காலிகமாக மூட உத்தரவு

எண்ணூரில் வாயுக் கசிவு ஏற்பட்ட கோரமண்டல் உர ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
sada
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

எண்ணூரில் வாயுக் கசிவு ஏற்பட்ட கோரமண்டல் உர ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertisment

எண்ணூர் பெரியகுப்பம் அருகே விரைவு சாலையில் கோரமண்டல் உர ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலைக்கு தேவையான ரசாயனங்கள் வெளிநாடுகளில் இருந்து கப்பல் மூலம் இறக்குமதி செய்யப்படுகிறது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு அமோனியா வாயு ஏற்றி வந்த கப்பல் நடுக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டு, அதிலிருந்து  குழாய் மூலம் அமோனியம் வாயு ஆலைக்குள் கொண்டு வரும் பணி நடைபெற்றது.

அப்போது குழாய்யில் ஏற்பட்ட உடைப்பால் அமோனியா வாய் கசிந்துள்ளது. இதனால் பெரிய குப்பம், சின்னக் குப்பம் உள்ளிட்ட  கிராமங்களில்  காற்றில் வாயு கலந்ததால் மக்களுக்கு கண் எரிச்சல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

இதனையடுத்து உடனடியாக குழந்தைகள் உள்பட 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து பெரும்பாலான மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில், வாயு கசிந்தது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், தனியார் உர ஆலையை தற்காலிகமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வாயுக் கசிவு குறித்து ஆய்வு நடத்தப்பட்ட பின்னர், ஆய்வுக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில்  அடுத்தகட்ட நடவடிக்கை  எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment