Subscribe
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்
  • வைரல்
  • தொழில்நுட்பம்
ad_close_btn
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • புகைப்படத் தொகுப்பு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்

Powered by :

செய்திமடலுக்கு வெற்றிகரமாக குழுசேர்ந்துள்ளீர்கள்.
தமிழ்நாடு

'அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர்' - ட்விட்டர் முகப்பு பக்கத்தை மாற்றிய இபிஎஸ்

'அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர்' என மீண்டும் தனது ட்விட்டர் முகப்பு பக்கத்தில் பதிவிட்டார் எடப்பாடி பழனிசாமி.

Written by WebDesk

'அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர்' என மீண்டும் தனது ட்விட்டர் முகப்பு பக்கத்தில் பதிவிட்டார் எடப்பாடி பழனிசாமி.

author-image
WebDesk
02 Sep 2022 13:30 IST

Follow Us

New Update
Tamil news

Tamil news updates

அதிமுகவில் இரட்டை தலைமை தொடர்பான சிக்கல் எழுந்த போது, எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டது. ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு கூட்டப்பட்டது. அந்த பொதுக்குழுவில் பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மேலும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்படுவார் என அறிவிக்கப்பட்டது.

Advertisment

ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவிற்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு நடைபெற்றது செல்லாது என்றும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டது செல்லாது எனவும் தீர்ப்பளிக்கப்பட்டது. அதிமுகவில் ஜுன் 23-க்கு முன்பிருந்த நிலை நீடிக்க வேண்டும். மேலும், அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் சேர்ந்துதான் பொதுக்குழு கூட்ட வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கானது, நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டது. இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

இந்நிலையில் இன்று (செப்.2) தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டு, ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளிக்கப்பட்டது. அதாவது ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு செல்லும் என தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதும் செல்லும். அந்தவகையில் எடப்பாடி பழனிசாமியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், முகப்பு பக்கத்தில் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர், 'அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர்' என மாற்றி பதிவிட்டுள்ளார்.

Advertisment
Advertisements
https://twitter.com/EPSTamilNadu

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news
logo

இதையும் படியுங்கள்
Read the Next Article
Latest Stories
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news

Latest Stories
Latest Stories
    Powered by


    Subscribe to our Newsletter!




    Powered by
    மொழியை தேர்ந்தெடுங்கள்
    Tamil

    இந்தக் கட்டுரையைப் பகிரவும்

    இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்
    அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

    Facebook
    Twitter
    Whatsapp

    நகலெடுக்கப்பட்டது!