Advertisment

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் என ஓ.பி.எஸ் பயன்படுத்தி வருகிறார்; ஐகோர்ட்டில் இ.பி.எஸ் புகார்

ஓ.பன்னீர் செல்வம் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் என்று எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்; சென்னை உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு குற்றச்சாட்டு

author-image
WebDesk
New Update
ops hc eps 2

ஓ.பன்னீர் செல்வம் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் என்று எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்; சென்னை உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு குற்றச்சாட்டு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

அ.தி.மு.க.,வில் உறுப்பினராக இல்லாத ஓ.பன்னீர் செல்வம், சமூக வலைதளங்களில் தன்னை அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட ஓ. பன்னீர்செல்வம், கட்சியின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை தொடர்ந்து பயன்படுத்தி வருவது தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் இவற்றை பயன்படுத்த ஓ.பி.எஸ்-க்கு தடை விதிக்க கோரி அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவிற்கு பதில் மனுத் தாக்கல் செய்ய தொடர்ந்து தாமதப்படுத்தியதால், அ.தி.மு.க பெயர், சின்னம், கொடி, லெட்டர் பேட் ஆகியவற்றைப் பயன்படுத்த ஓ.பி.எஸ்-க்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து ஓ.பி.எஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்த இரு நீதிபதிகள் அமர்வு, தடையை நீக்கக் கோரி தனி நீதிபதியிடம் மீண்டும் மனுத் தாக்கல் செய்ய அறிவுறுத்தினார்.

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்திருந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பாக கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், வாதங்களை முன்வைக்க ஏதுவாக விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதனையேற்ற நீதிபதி சதீஷ்குமார், வழக்கின் விசாரணையை மார்ச் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். அதுவரை கட்சியின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை ஓ.பி.எஸ் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை உத்தரவை நீட்டித்து உத்தரவிட்டார்.

இதனிடையே இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், அ.தி.மு.க.,வில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் இல்லை அப்படி இருக்கும் போது ஓ.பன்னீர் செல்வம் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் என்று எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார். மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் கட்சிக்கு சம்பந்தம் இல்லாத ஒருவர் கட்சி நடவடிக்கையில் தலையிடுவது தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும் என்று வாதிடப்பட்டது.

இன்றைய தினம் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வாதம் முடிவடைந்ததை அடுத்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பு வாதத்திற்காக வரும் 12ஆம் தேதிக்கு வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ops Eps Aiadmk Madras High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment