'தண்ணீர் தேங்காமல் இருக்கிறதே இதுதான் வெள்ளை அறிக்கை': இ.பி.எஸ்-க்கு உதயநிதி பதிலடி

மீண்டும் கனமழை பெய்தாலும், அதை எதிர்கொள்ளத் தமிழ்நாடு அரசு தயார் நிலையில் உள்ளது- துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

மீண்டும் கனமழை பெய்தாலும், அதை எதிர்கொள்ளத் தமிழ்நாடு அரசு தயார் நிலையில் உள்ளது- துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
u rep

தென்மேற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று வலுப்பெற்றது. இது நாளை (அக். 17) சென்னை அருகே கரையைக் கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இதையொட்டி சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்னும் 3 நாட்கள் மழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

Advertisment

இந்நிலையில் சென்னையில் கனமழை காரணமாக சாலைகளில் மழை நீர் தேங்கியது, ஆங்காங்கே மரங்கள் சாய்ந்து விழுந்தன. இருப்பினும் மாநகராட்சி ஊழியர்கள் அவற்றை உடனடியாக அப்புறப்படுத்தி வருகின்றனர். உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மழை பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்து பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், பருவமழையில் தொடர்ந்து பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு, சேப்பாக்கத்தில் உதவிப் பொருட்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று வழங்கினார். ரூ.2000 ஊக்கத் தொகையுடன் நிவாரண பொருட்களை அவர் வழங்கினார். 

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  "நேற்று முன்தினம் இரவும், நேற்று பகலிலும் மிக அதிக கனமழை பெய்தது. முதல்வரின் ஆலோசனைக்குப் பிறகு அனைத்து அதிகாரிகள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், எம்.பி.க்கள், கவுன்சிலர்கள் என அனைவரும் களத்தில் இறங்கி, பணியாற்றினர். இன்று மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரை லேசான மழைதான் பெய்து வருகிறது" என்றார்.

Advertisment
Advertisements

தொடர்ந்து  அவரிடம் மழைநீர் தடுப்பு பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென எடப்பாடி பழனிசாமி வலியுறுத்துவது குறித்து கேள்வி எழுப்பபட்டது. இதற்கு பதிலளித்த அவர், "கனமழையில் கூட தண்ணீர் நிக்காம இருக்கே, இதுதான் வெள்ளை அறிக்கை. மீண்டும் கனமழை பெய்தாலும், அதை எதிர்கொள்ளத் தமிழ்நாடு அரசு தயார் நிலையில் இருக்கிறது. 

மழையின்போது நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள், மெட்ரோ பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி” என கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: