/tamil-ie/media/media_files/uploads/2023/01/eps-1609306500-1.jpg)
Tamil news updates
அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் இன்று நீதிபதி மகேஷ்வரி தினேஷ் அமர்விடம் இ.பி.எஸ் தரப்பில், வழக்கறிஞர் அரிமா சுந்தரம் முறையீடு செய்தார்.
அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் என்ற முறையில் எனது கையொப்பத்தை ஏற்க தேர்தல் ஆணையம் மறுக்கிறது. அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளராக தேர்தெடுக்கப்பட்டதை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.
பன்னீர் செலவம் தரப்பிற்கு இந்த கோரிக்கை தெரிவிக்கப்பட்டதா என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள். மேலும் தகவல் தெரிவிக்கப்பட்டதாக இ.பி.எஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் வருகின்ற 30ம் தேதி முறையீடு செய்யுமாறு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.