/tamil-ie/media/media_files/uploads/2023/06/EPS-2.jpeg)
சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவை மீறி விசாரணையை தொடர்வதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள மனுவிற்கு, ஜூலை 7 ஆம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட எடப்பாடி பழனிச்சாமி, தனது வேட்பு மனு மற்றும் பிரமாண பத்திரத்தில் சொத்து விவரம் ஆகிய முக்கிய தகவல்களை தவறாக தெரிவித்துள்ளதால் அவர் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கூறி வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சேலம் நீதிமன்றம், முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்து அறிக்கை தாக்கல் செய்ய சேலம் குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், நீதிமன்றம் இந்த விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என்று காவல்துறையிடம் அறிவுறுத்தியும், சேலத்தில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் தனது கணக்கு குறித்த விவரங்களை கேட்பது, ஈரோட்டில் 1973-76ம் ஆண்டுகளில் தான் படித்த ஸ்ரீவாசவி கல்லூரிக்கு போலீசார் கடிதம் எழுதுவது போன்ற செயல்களை செய்வதால், இரு அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தேர்தல் வேட்புமனுவில் தவறான தகவலை தெரிவித்ததாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இதனால், சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.