முன்னாள் முதல்வர் இ.பிஎ.ஸ் நேரடி உதவியாளர் தோட்டத்து வீட்டில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. இதில் ஈடுபட்ட 5 பேரவை போலிசார் கைது செய்திள்ளனர்.
ராசிபுரம் அடுத்த நாளைக்கிணறு பகுதியை சேர்ந்தவர் அருண் பிரகாஷ். ராசிபுரம் அருகே உள்ள பண்ணை வீட்டில், அருண் பிரகாஷின் பெற்றோர் வசித்து வருகின்றனர்.
கடந்த சனிக்கிழமை 2 சொகுசு காரில் வந்தவர்கள், பண்ணை வீட்டின் கதை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். அப்போது வீட்டில் இருப்பவர்கள் கூச்சலிட்டதால், அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
மேலும் சி.சி.டி.வி கேமராவில் இது பதிவாகி உள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக காவல்துறையினர் இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“