/indian-express-tamil/media/media_files/2025/04/20/RVxO5fRXv2HmfAxhW09i.jpg)
நீட் தேர்வைகூறி இனியும் மக்களை ஏமாற்ற முடியாது. 2026 ஆம் ஆண்டு தேர்தலில் எடப்பாடியார் தலைமையிலான ஆட்சி அமைவது உறுதி என்று கோவையில் முன்னாள் அமைச்சரும்,அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.
முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி தலைமையில் நீட் தேர்வால் உயிரிழந்த மாணவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் ஏராளமான கழக மாணவரணியினர் கலந்துகொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்துயதுடன், திமுக அரசிற்கு எதிராக உயிரிழந்த மாணவர்களுக்கு நியாயம் கேட்டு கோசங்களை எழுப்பினர்.
இந்த நிகழ்ச்சியில் கோவை மாநகர மாவட்ட செயலாளரும், வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் கே அர்ஜுனன், கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும், கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினருமான பி.ஆர்.ஜி.அருண்குமார், மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் எ.கே செல்வராஜ், கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் செ.தாமோதரன், சூலூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.கந்தசாமி உட்பட சட்டமன்ற உறுப்பினர்களும், கழக மாணவர் அணி நிர்வாகிகளும், தொண்டர்களும், திரளாக கலந்துகொண்டுள்ளனர்.
மேலும் நீட் தேர்வால் உயிரிழந்த 22 மாணவ, மாணவிகளுக்காக மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி பேசினார்.
நீட் தேர்வின் பெயரால் திமுக அரசு மக்களை ஏமாற்றியதால் 22 மாணவ மாணவிகள் உயிரிழந்தார்கள், இருந்தாலும், திமுக நீட் தேர்வின் பெயரால் மக்களை ஏமாற்ற அனைத்து கட்சி கூட்டம் நடத்துகிறார்கள்.
உண்மை என்னவென்றால் காங்கிரஸ் ஆட்சியில் திமுக கூட்டணியில் இருக்கும்போது திமுக காந்திராஜன் கல்வி மந்திரியாக இருக்கும்போது நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது.
அப்போது நீட்டிற்கு எதிராக வழக்கு தொடர்ந்தது மாண்புமிகு அம்மா அவர்கள், ஆனால் நீட் தேர்விற்காக நீதி மன்றத்தில் வழக்காடியது திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் ப. சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம்தான் ஆனால் அதையெல்லாம் மறைத்து, மக்களை ஏமாற்றி பொய் வாக்குறுதிகளை கொடுத்து 22 மாணவ, மாணவிகள் உயரிழந்தார்கள், ஆனால் மக்கள் இன்று தெளிவாக இருக்கின்றார்கள் தொடர்ந்து மக்களை ஏமாற்ற முடியாது.
அதுபோல் திமுக அமைச்சர் பொன்முடி பெண்களை மிகவும் இழிவாகபேசியதால் பொதுச்செயலாளர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் பல இடங்களிலும் வழக்குகள் பதியப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
மேலும் நீட் தேர்வை காண்பித்து மத்திய அரசு மீது பழியைபோட்டு சட்டமன்ற தேர்தலை சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது திமுக, ஆனால் அண்ணன் எடப்பாடியார் தலைமையிலான ஆட்சியில் 7.5% சதவிகிதம் மருத்துவ இடஒதுக்கீடு கொண்டுவந்ததால் இன்று ஏராளமான அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவபடிப்பு படித்து வருகிறார்கள்.
அதிமுகவை பொறுத்தவரை கூட்டணி வேறு, கொள்கை வேறு. இப்போது இருப்பது தேர்தலுக்காண கூட்டணி, வக்பு சட்டத்திற்கு எதிராக பாராளுமன்றத்தில் வாக்களித்துள்ளோம், சட்டமன்றத்தில் கொண்டுவந்த வக்புக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.
மேலும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எடப்பாடியார் தலைமையில் தமிழகத்தில் 200 தொகுதிகளுக்குமேல் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைப்போம் என்று தெரிவித்தார். அதைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி, “தமிழகத்தில் திமுக நீட் ரகசியம் இருப்பதாகவும், ஆட்சிக்கு வந்தவுடன் நீட் ரத்து செய்யப்படும் என்றும் பொய் வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றியதால் 22 மாணவ கண்மணிகளை நாம் இழந்துள்ளோம்.
தற்பொழுது நீட் விலக்கிற்கு அனைத்து கட்சி கூட்டம் நடத்துவதாக திமுக மீண்டும் நாடகத்தை நடத்தி வருகிறது. அதனால் அந்த நாடகத்தை அண்ணன் கழக பொதுச்செயலாளர் அவர்கள் புறக்கணித்துள்ளார்கள்.
மேலும் நீட் தேர்வை கொண்டுவந்ததே காங்கிரஸ் ஆட்சியில் குலாம் நபி ஆசாத்தும், தமிழகத்தில் திமுக அமைச்சர் காப்திராஜன் இருக்கும்போதுதான் நீட் கொண்டுவரப்பட்டது. இது தற்பொழுது மக்கள் அனைவரும் உணர துவங்கி விட்டார்கள். எனவே வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் அண்ணன் எடப்பாடியார் தலைமையில் 200 தொகுதிகளுக்குமேல் வெற்றி பெற்று தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமையும் என்றும் தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.