New Update
/indian-express-tamil/media/media_files/2025/08/04/eps-nainar-2025-08-04-19-22-38.jpg)
ஒரே மேடையில் இ.பி.எஸ் - நயினார் நாகேந்திரன்: இரட்டைக் குழல் துப்பாக்கியாக செயல்படுவோம் என அறிவிப்பு
நெல்லை வாகைஅடி முனை பகுதியில் கொட்டும் மழையிலும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டுவருகிறார். அவருடன், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உடனிருந்தார்.
ஒரே மேடையில் இ.பி.எஸ் - நயினார் நாகேந்திரன்: இரட்டைக் குழல் துப்பாக்கியாக செயல்படுவோம் என அறிவிப்பு
'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பிரச்சார பயணத்தை நடத்திவருகிறார். நெல்லை வாகைஅடி முனை பகுதியில் கொட்டும் மழையிலும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டுவருகிறார். அவருடன், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உடனிருந்தார். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, மழையிலும் இங்கு வந்துள்ள மக்களை பார்க்கும்போது அ.தி.மு.க. வெற்றி உறுதியாகிவிட்டது" என்றார்.
தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி குறித்து பேசிய நயினார் நாகேந்திரன், “தி.மு.க. ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில்தான் மக்களை சந்தித்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி. அவரது பிரசாரத்துக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. இந்த ஆதரவு ஆட்சி மாற்றத்துக்கான அறிகுறியாகும்” என்றார். தமிழகத்தில் இப்போது நடைபெறுவது எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு எதிரான மக்கள் விரோத ஆட்சி. திமுக ஆட்சி விரைவில் அகற்றப்படும். இந்த ஆட்சியில்தான் தினந்தோறும் பாலியல் வன்கொடுமைகள், கஞ்சா கடத்தல், கொலை, கொள்ளைகள் அரங்கேறுகின்றன” என்றார்.
இதையடுத்து கூட்டணி குறித்து பேசிய அவர், “அதிமுக - பாஜக கூட்டணி பலமான கூட்டணியாக உள்ளது. இந்த கூட்டணி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இருக்கும் என உள்துறை அமைச்சர் அமித்ஷாவே கூறிவிட்டார். 2026 சட்டமன்றத் தேர்தலில் எங்கள் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். அதிமுக - பாஜக கூட்டணி இரட்டை குழல் துப்பாக்கியாக செயல்பட்டு மக்களுக்கான திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்தும்” என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.