Advertisment

எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவிக்கு இ.பி.எஸ் பரிந்துரை கடிதம்; சபாநாயகர் முடிவு என்ன?

இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் அளித்துள்ள கடிதங்கள் குறித்து, சபாநாயகர் அப்பாவு வியாழக்கிழமை பரிசீலனை செய்து முடிவெடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சட்டப்பேரவையைப் பொறுத்தவரை என்ன முடிவெடுத்தாலும், அது சபாநாயகரின் அதிகாரத்துக்கு உட்பட்டது.

author-image
WebDesk
New Update
ops eps letter, tamilnadu assembly meeting, aiadmk, ops vs eps, appavu, speaker appavu

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அக்டோபர் 17-ம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவை அலுவலக் குழு கூட்டத்தில், அ.தி.மு.க சார்பில் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆ.பி. உதயகுமாரை பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என சபாநாயகர் அப்பாவு இடம் வலியுறுத்தியுள்ளார்.

Advertisment

அ.தி.மு.க-வில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் இடையே மோதல் நிலவிவருகிறது. சென்னை உயர் நீதிமன்ற 2 நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பின்படி, எடப்பாடி பழனிசாமி பொதுக்குழு தீர்மானத்தின்படி அ.தி.மு.க-வின் இடைக்கால பொதுச் செயலாளராக உள்ளார். இந்த தீர்ப்பை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு வழக்கு தொடர்ந்துள்ளார். அ.தி.மு.க-வில் இருவரும் தங்களுடைய முக்கியத்துவத்துக்காக சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் அக்டோபர் 17-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டத்தில், அ.தி.மு.க சார்பில் ஆர்.பி. உதயகுமாரை அனுமதிக்க கோரி இ.பி.எஸ் சபாநாயகர் அப்பாவுக்கு கடிதம் கொடுத்துள்ளார்.

அ.தி.மு.க.வின் துணைக் கொறடா எஸ்.ரவி, சபாநாயகர் அலுவலகத்தில் இ.பி.எஸ் கடிதத்தை செவ்வாய்க்கிழமை அளித்தார்.

இதே போல, ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் நான்தான், சட்டப்பேரவையில் கட்சி சார்பில் எந்த முடிவுகள் எடுப்பதாக இருந்தாலும், தன்னை கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டும் என்று ஓ.பி.எஸ் சபாநாயகர் அப்பாவு இடம் இரண்டு முறை கடிதம் அளித்துள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம் சபாநாயகரிடம் அளித்துள்ள கடிதத்தில், அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளராகவும், எதிர்க்கட்சித் துணைத் தலைவராகவும் தான் தொடர்ந்து இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், அ.தி.மு.க சட்டமன்றக் கட்சி தொடர்பான முடிவுகள் குறித்து தன்னை கலந்து ஆலோசிக்குமாறு தெரிவித்துள்ளார்.

இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் அளித்துள்ள கடிதங்கள் குறித்து, சபாநாயகர் அப்பாவு வியாழக்கிழமை பரிசீலனை செய்து முடிவெடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சட்டப்பேரவையைப் பொறுத்தவரை என்ன முடிவெடுத்தாலும், அது சபாநாயகரின் அதிகாரத்துக்கு உட்பட்டது.

மேலும், சட்டப்பேரவையில், இருக்கை ஒதுக்குவது என்பதும் சபாநாயகரின் முடிவுக்குட்பட்டது. அதனால், ஓபிஎஸ் - இபிஎஸ் தரப்பில் அளிக்கப்பட்டுள்ள கடிதங்கள் குறித்து சபாநாயகர் பரிசீலனை செய்ய உள்ளார். இதனால், சபாநாயகர் என்ன முடிவெடுப்பார் என்ற எதிர்ப்பார்ப்புகள் எழுந்துள்ளன.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Aiadmk Ops Eps 2
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment