/tamil-ie/media/media_files/uploads/2017/05/a67.jpg)
அ.தி.மு.க பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து வழக்கில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் என எப்படி மனுதாக்கல் செய்ய முடியும் என எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியதை அடுத்து அவர் மனிப்பு கோரியுள்ளார்.
அ.தி.மு.க பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம், ஜே.சி.டி.பிராபகர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படிருந்தன.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் ராஜலட்சுமி, இளம்பாரதி ஆஜராகி, சென்னை உயர்நீதிமன்றத்தில் இணை ஒருங்கிணைப்பாளர் என மனுதாக்கல் செய்துவிட்டு, தற்போது பொதுச் செயலாளர் இ.பி.எஸ் எனக் கூறி பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுளதாக தெரிவித்தார்.
இந்நிலையில் இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதி, அ.தி.மு.க பொதுச் செயலாளர் தொடர்பான வழக்கில் நிலையிலுள்ள நிலையில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் என குறிப்பிட்டு எப்படி மனுதாக்கல் செய்ய முடியும் என எடப்பாடி பழனிச்சாமி தரப்பிற்கு கேள்வி எழுப்பினார்.
இதற்கு இ.பி.எஸ் சார்பில் மனிப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் விசாரணையை ஆகஸ்ட் 7ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.