New Update
/indian-express-tamil/media/media_files/2024/10/17/14lHt1jkeCnFkymshkr9.jpg)
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2021 தமிழக சட்டமன்றத் தேர்தல்களில் அ.தி.மு.க தலைமையில் பா.ஜ.க உடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டனர். இதையடுத்து பா.ஜ.க தலைவர் அண்ணாமலை உடனான மோதல் உள்ளிட்ட காரணங்களால் பா.ஜ.க உடனான கூட்டணியை அ.தி.மு.க முறித்துக் கொள்வதாக அறிவித்தது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தனித்தனியாக போட்டியிட்டன.
இந்நிலையில், நேற்று திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் பா.ஜ.க உடன் அ.தி.மு.க மீண்டும் கூட்டணியா? என்ற கேள்வி எழுப்பபட்டது. வழக்கம் போல் அவர் மறுப்பு தெரிவிப்பார் என எதிர்பார்த்த நிலையில் இ.பி.எஸ்ஸின் பதில் அரசியல் களத்தில் பேசுபொருளாகி உள்ளது.
இ.பி.எஸ் பேசுகையில், "தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இருக்கிறது. தேர்தல் நெருங்கும்போதுதான் யார் யாருடன் கூட்டணி என்பது தெரியும். அதிமுகவைப் பொறுத்தவரையில், எங்கள் தலைமையை ஏற்று, ஒத்த கருத்துடன் உள்ள கட்சியுடன் அதிமுக கூட்டணி அமைக்க தயார். ஒத்த கருத்துள்ள கட்சிகள் எல்லாம் இணைக்கப்பட்டு மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றுவதே எங்களின் நோக்கம்" என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.