ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலுக்காக, 31 பேர் கொண்ட பணிக்குழுவை திமுக அமைத்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி எம். எல்.ஏ திருமுருகன் ஈவேராவின் மறைவைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 31-ம் தேதி தொடங்குகிறது. பிப்ரவரி 27ம் தேதி வாக்குப்பதிவும் மார்ச் 2-ல் வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது.
இந்த தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வாய்ப்பு காங்கிரஸுக்கு வழங்கப்பட்டது. அதில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போடியிடுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக திமுக சார்பில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் 11 அமைச்சர்கள், 7 எம்.எல்.ஏக்கள், 2 எம்பிக்கள் உள்ளடக்கிய 31 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கே.என்.நேரு, எஸ். முத்துசாமி, எ.வ. வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர், இராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, தா.மோ. அன்பரசன் , சக்கரபாணி, மு.பெ.சாமிநாதன், வி.செந்தில் பாலாஜி , ஆவடி சா.மு.நாசர், கயல்விழி செல்வராஜ், அந்தியூர் செல்வராஜ், கோவை.நா கார்த்திக், தளபதி முருகேசன், தொ.அ.ரவி, க.வசந்தம் கார்த்திகேயன், தா.உதயசூரியன், சேலம் ஆர்.ராஜேந்திரன், டி.எம். செல்வகணபதி, எஸ்.ஆர். சிவலிங்கம், என்.நல்லசிம், இல.பத்மநாபன், பா.மு,முபாரக், தே.மதியழகன், கே ஆர்.என் ராஜேஸ்குமார், எஸ்.எம். மதுரா செந்தில் , பெ.பழனியப்பன், ஒய். பிரகாஷ், திருப்பூர் செல்வராஜ், ஐ.பி. செந்தில்குமார், தடங்கம் சுப்ரமணி.