ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாதக வேட்பாளர் சீதாலட்சுமி வேட்புமனு தாக்கல் செய்தார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி தனியாக சென்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நா.த.க வேட்பாளராக போட்டியிடும் சீதாலட்சுமி கடைசி நாளான இன்று வேட்புமனு தாக்கல் செய்ய சென்றார்.
தனி ஆளாக நாம் தமிழர் கொடியை ஏந்தியவாறு சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். நடந்து சென்று மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். கடைசி நாளான இன்று நா.த.க வேட்பாளர் சீதாலட்சுமி தனி ஆளாக நடந்து சென்று மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5-ந்தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் 10 ஆம் தேதி தொடங்கியதையடுத்து விடுமுறை தினங்களை தவிர்த்து கடந்த 10 மற்றும் 13 ஆம் தேதி என 2 நாட்கள் மட்டும் வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. இந்த 2 நாட்களில் 9 பேர் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று வேட்புமனு தாக்கல் நிறைவுபெற உள்ளதால் இன்று பகல் 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சீதாலட்சுமி தற்போது வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
நாளை வேட்புமனுக்கள் மீதான பரிசீலனையும் வருகிற 20 ஆம் தேதி வாபஸ் பெற கடைசி நாளும் அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று இறுதி வேட்பாளர் பட்டியல், சின்னத்துடன் வெளியிடப்படும். பிப்ரவரி 5 ஆம் தேதி வாக்குப்பதிவும், 8 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது.