Advertisment

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்: இன்று முதல் 3 நாட்கள் மட்டுமே வேட்பு மனுத் தாக்கல்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது.

author-image
WebDesk
New Update
erode east by election

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் காலமானதையடுத்து தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5-ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. 

Advertisment

தேர்தலில்  போட்டியிட விரும்பும் கட்சிகள், வேட்பாளர்கள் ஜனவரி 10 முதல் வேட்பு மனுத் தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. ஜனவரி 10 முதல் 17-ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. 

அதன்படி இன்று முதல் வேட்பு மனு தாக்கல்  தொடங்குகிறது. பொங்கல் பண்டிகை காரணமாக 10, 13, 17 ஆகிய 3 நாட்கள் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும். 11, 12, 14, 15, 16 ஆகிய தேதிகள் பொங்கல் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதையடுத்து வேட்பு மனு தாக்கல் செய்ய ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் அ.தி.மு.க, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சிகள் போட்டியிட வில்லை என அறிவித்துள்ளன. 

Advertisment
Advertisement

 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment