Advertisment

தனியார் கல்வி நிறுவனங்களுக்கு தொழிலாளர் காப்பீட்டு சட்டம் பொருந்துமா? உயர்நீதிமன்றம் விசாரணை

தனியார் கல்வி நிறுவனங்களுக்கு தொழிலாளர் காப்பீட்டு சட்டம் பொருந்துமா என்பது குறித்த விசாரணையை சென்னை உயர்நீதிமன்ற 3 பெண் நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரணையை துவங்கியது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
udumalaipettai shankar case , chennai High court

udumalaipettai shankar case , chennai High court

தனியார் கல்வி நிறுவனங்களுக்கு தொழிலாளர் காப்பீட்டு சட்டம் பொருந்துமா என்பது குறித்த விசாரணையை சென்னை உயர்நீதிமன்ற 3 பெண் நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரணையை துவங்கியது.

Advertisment

கல்வி நிறுவனங்களுக்கும் இ.எஸ்.ஐ சட்டம் பொருந்தும் எனக் கூறி தமிழக அரசு 2010-ம் ஆண்டு அறிவிப்பாணை வெளியிட்டது.

இதை எதிர்த்து அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கம் மற்று கல்வி நிறுவனங்களின் சார்பில் பல வழக்குகள் தொடரப்பட்டன.

சிங்காரச் சென்னை வரலாறு 1 : இது தங்கசாலை தெரு உருவான கதை...

இந்த வழக்குகளை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வு, ஏற்கனவே இந்த விவகாரம் உச்ச நீதிமன்ற 9 நீதிபதிகள் அமர்வில் நிலுவையில் உள்ளதால், தற்போது தமிழக அரசின் உத்தரவை அமல்படுத்த கூடாது என உத்தரவிட்டிருந்தார்.

ஆனால், கேரள உயர் நீதிமன்ற உத்தரவுகளை மேற்கோள்காட்டி, தமிழக அரசு உத்தரவை அமல்படுத்த உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவு பிறப்பித்திருந்தது.

உயர் நீதிமன்றத்தின் இரு வேறு அமர்வுகள், வெவ்வேறு தீர்ப்புகளை வழங்கியதால், இ.எஸ்.ஐ. சட்டம் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு பொருந்துமா? என்பன உள்ளிட்ட சட்ட கேள்விகளுக்கு பதில் காணும் வகையில், இந்த வழக்கு மூன்று நீதிபதிகள் அமர்வுக்கு பரிந்துரைத்து தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி உத்தரவிட்டார்.

இதன்படி, சென்னை உயர் நீதிமன்ற வரலாற்றில் முதல் முறையாக மூன்று பெண் நீதிபதிகள் அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.

நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, அனிதா சுமந்த், பி.டி.ஆஷா அடங்கிய அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன், கல்வி நிறுவனங்கள் தொழிற்சாலையா ? இல்லையா? என்பது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற 9 நீதிபதிகள் அமர்வில் நிலுவையில் உள்ளதால், தமிழக அரசின் உத்தரவை அமல்படுத்த முடியாது என வாதிட்டார்.

தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், கல்வி நிறுவனங்கள் தொழிற்சாலையா இல்லையா என்பது மட்டுமல்லாமல் பல சட்ட கேள்விகள் இந்த வழக்கில் எழுப்பப்பட்டுள்ளதாக வாதிட்டார்.

இந்த வழக்கின் விசாரணையை நாளைக்கு (மார்ச் 5) நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

Tamil Nadu Chennai High Court Tamil Nadu Government
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment