காலை உணவுத் திட்டம் 31,000 பள்ளிகளுக்கு விரிவாக்கம்: தமிழ்நாடு அரசு உத்தரவு

இத்திட்டத்தினால் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் செயல்படும் 31,008 அரசுப் பள்ளிகளில் பயிலும் 15.75 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர்.

இத்திட்டத்தினால் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் செயல்படும் 31,008 அரசுப் பள்ளிகளில் பயிலும் 15.75 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
mk stalin

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை ₹404 கோடியில் விரிவாக்கம் செய்வதாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Advertisment

தமிழ்நாட்டில் உள்ள ஏழை மாணவர்களின் படிப்பினை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்துக் குறைபாட்டினை போக்கவும், கற்றல் இடைநிற்றலைத் தவிர்க்கவும், அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை வேலை நாட்களிலும் காலை சிற்றுண்டி வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார்.

இத்திட்டமானது கடந்த ஆண்டு முதல், பேரறிஞர் அண்ணாவின் 114ஆவது பிறந்தநாளையொட்டி நடைமுறைக்கு வந்தது. தற்போது, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் ₹404 கோடியில் விரிவாக்கம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Mk Stalin

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: