தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கான இரண்டு நாள் கூட்டம், கோவை குரும்பபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரில் நேற்று தொடங்கியது. இதன் இரண்டாவது நாள் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
ஏற்கனவே, நேற்று நடைபெற்ற கூட்டத்தில் ஈரோடு, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் அக்கட்சி தலைவர் விஜய் உரையாற்றினார்.
இதனால், நேற்றைய தினம் வந்திருந்த தொண்டர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு பாதுகாவலர்கள் கடும் சிரமத்துக்குள்ளாகினர். இன்று நடத்தப்படும் நிகழ்வில் கோவை, நீலகிரி, கரூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 8000 பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக கேரளாவில் இருந்து கூடுதல் பவுன்சர்கள் வரவழைக்கப்பட்டனர்.