மின் நுகர்வு அடிப்படையில் 'ஒப்பந்த தேவையை' திருத்தி அமைக்க தவறியதால் சென்னையில் உள்ள 10 அரசு அலுவலகங்களில் மின் கட்டணம் ரூ. 4.88 கோடி அளவிற்கு அதிகமாக செலவு செய்யப்பட்டுள்ளதாக சி.ஏ.ஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மற்றொரு அரசு அலுலவகத்தில் மின்சார விநியோகத்தை சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்காததால் ரூ. 1.68 கோடி செலவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மார்ச் 2023 ஆம் ஆண்டிற்கான இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் அறிக்கை, நேற்று (ஏப்ரல் 29) தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
10 அரசு அலுவலகங்களில் இத்தகைய மின் வசூலிப்பு நடந்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சைதாப்பேட்டையில் உள்ள கருவூலங்கள் மற்றும் கணக்கு ஆணையர் அலுவலகம், வணிக வரிகள் மற்றும் பதிவுத் துறை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், லஞ்சம் மற்றும் தடுப்பு இயக்குநரகம், நகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகம், மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ அலுவலகம், எழும்பூரில் உள்ள அரசு மருத்துவமனை, பள்ளிக் கல்வி இயக்குநரகம், ஊழியர்களுக்கான அரசு காப்பீட்டு மருத்துவமனை மற்றும் அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஆகியவற்றில் இந்த விவகாரம் அரங்கேறியுள்ளது. இந்த அலுவலகங்களில் ஒப்பந்த தேவையை மறுபரிசீலனை செய்யவும், தேவையான மின் நுகர்வு அடிப்படையில் டாங்கெட்கோ உடனான ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யவும் அனைத்து துறைகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று சி.ஏ.ஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒப்பந்த தேவைக்கான மின் இணைப்பானது டாங்கெட்கோ (Tangedco) இடையேயான ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது மின் தேவையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்சார துறையின் ஒழுங்குமுறை 17(6)-ன் படி, நுகர்வோர்கள் ஒரு வருடத்தின் ஆரம்ப ஒப்பந்த காலம் முடிந்த பிறகு, தற்போதுள்ள ஒப்பந்த தேவையை வருடத்திற்கு ஒருமுறை 50% வரை குறைக்க உதவுகிறது.
நுகர்வோரிடமிருந்து விண்ணப்பம் பெறப்பட்ட நாளிலிருந்து, ஏழு நாட்களுக்குள் டாங்கெட்கோ அத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும். மின்சாரக் கட்டணத்தில் உள்ள டிமாண்ட் சார்ஜ் கூறுகள், உண்மையான பதிவு செய்யப்பட்ட தேவை அல்லது 90% ‘ஒப்பந்த தேவை’ என எது அதிகமாக இருக்கிறதோ, அதை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது. 2017-23 ஆம் ஆண்டில் அரசு அலுவலகங்களில் நுகர்வோரின் மின் கட்டணம் செலுத்துவதற்கான வவுச்சர்கள் தொடர்பான பதிவேடுகளின் தணிக்கை ஆய்வு, முழு காலகட்டத்திலும் ‘ஒப்பந்த தேவையை’ விட ‘பதிவு செய்யப்பட்ட தேவை’ மிகவும் குறைவாக இருந்தது தெரியவந்தது.
மின்சார கட்டணம், தணிக்கை மூலம் ஆய்வு செய்யப்பட்ட எந்த மாதத்திலும் ‘ஒப்பந்த தேவையில்’ 50% கூட பயன்படுத்தவில்லை. ‘ஒப்பந்த தேவை’ 120 KVA முதல் 2,614 KVA வரை இருந்தபோதிலும், அதற்கான அதிகபட்ச தேவை 39.36 KVA மற்றும் 1,283.70 KVA வரை மட்டுமே இருந்தது.
பதிவு மற்றும் வணிக வரிகள் துறை அலுவலகத்தில் சராசரி 'பதிவு செய்யப்பட்ட தேவை' 19% குறைவாக இருந்தது. மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ நிறுவனம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான அரசு மருத்துவமனையில் அதிகபட்ச சராசரி ‘பதிவு செய்யப்பட்ட தேவை’ 56% குறைவாக பதிவாகியுள்ளது.
குறைந்த பயன்பாடு இருந்தபோதிலும், எந்த ஒரு அலுவலகமும் ‘ஒப்பந்த தேவையை’ திருத்தவில்லை. ஒவ்வொரு நுகர்வோரின் உண்மையான 'ஒப்பந்த தேவை' மற்றும் ஒரு நியாயமான தேவை ஆகியவற்றுக்கு இடையே உள்ள வேறுபாட்டைக் கணக்கிடுவதன் மூலம் தேவைக் கட்டணங்களில் தவிர்க்கக்கூடிய செலவினங்களை தணிக்கை கணக்கிடுகிறது.
மேற்கூறிய முறையைப் பின்பற்றிய போதிலும், நடைமுறையில் உள்ள கட்டணங்களில் கணக்கிடப்பட்ட மின்சாரக் கட்டணங்களுக்கான அதிகப்படியான கட்டணம் ரூ. 4.88 கோடியாக இருந்தது என்பதை பகுப்பாய்வு வெளிப்படுத்தியது.