Advertisment

ரேஷனில் இந்த மாதம் பருப்பு, பாமாயில் வாங்கவில்லையா? தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு

மே மாதத்தில் பருப்பு, பாமாயில் பெற முடியாதவர்கள் ஜூன் முதல் வாரம் வரை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிப்பு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
TN GOVT announce Incentives for ration shop workers Tamil News
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

குடும்ப அட்டைதாரர்கள் இந்த மாதம் (மே 2024)-ல் ரேஷனில் பாமாயில் மற்றும் துவரம் பருப்பு வாங்கவில்லை, கிடைக்கவில்லை என்றால் அதை ஜுன் மாதம் முதல் வாரம் வரை சம்பந்தப்பட்ட கடைகளில் சென்று பெற்றுக் கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக,  பாமாயில், துவரம் பருப்பு கொள்முதல் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது எனவும் அரசின் தீவிர நடவடிக்கையால் தற்போது, கொள்முதல் செய்யப்பட்டு, ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன எனவும் உணவு பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.

Advertisment

இதுகுறித்து உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், 

தமிழ்நாடு அரசு, சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் வாயிலாக 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம்தோறும் தலா ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.30க்கும் ஒரு லிட்டர் பாமாயில் ரூ.25க்கும் மானிய விலையில் வழங்கி வருகிறது. 

பாராளுமன்றத் தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக பாமாயில் மற்றும் துவரம் பருப்புக்கான ஒப்பந்தப் புள்ளிகள் மீதான முடிவுகள் மேற்கொண்டு அப்பண்டங்களைக் கொள்முதல் செய்வதில் காலதாமதம் நேரிட்டது.

இருப்பினும் அரசின் தொடர்ந்த சீரிய முயற்சிகள் காரணமாக நகர்வுப் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு நேற்று (மே 27) வரை 82,82,702 குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ துவரம் பருப்பினையும், 75,87,865 குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு லிட்டர் பாமாயில் பாக்கெட்டினையும் நியாய விலை கடைகளிலிருந்து வழங்கப்பட்டுள்ளது.

மீதம் பெற வேண்டிய துவரம்பருப்பு மற்றும் பாமாயில் ஒப்பந்ததாரர்களிடமிருந்து பெற்று விரைவாக கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.  குடும்ப அட்டை தாரர்களுக்கு மே 2024 மாத ஒதுக்கீட்டினை இம்மாத இறுதிக்குள் வழங்கிட அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இருப்பினும் மே 2024 மாதத்தில் பருப்பு மற்றும் பாமாயில் பெற முடியாதவர்கள் வசதிக்காக ஜுன் 2024 மாதம் முதல் வாரம் வரை நியாய விலைக்கடைகளில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெற்றுக் கொள்ள தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளும்படி மாவட்ட வழங்கல் அலுவலர்கள் அறிவுறுத்தப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Ration shop
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment