கோவையில் ஐ.டி ஊழியருக்காக பீகாரில் இருந்து வாங்கி வரப்பட்ட கள்ளத் துப்பாக்கி மற்றும் 6 குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மூன்று பேரிடம் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேரன் மாநகர் பகுதியைச் சேர்ந்த ஐ.டி ஊழியர் மணிகண்ட பிரபு என்பவருக்காக ஹரிஷ் என்பவரும், கோவையில் வசிக்கும் பீகாரை சேர்ந்த குந்தன்ராஜ் என்பவரும் கள்ளத் துப்பாக்கி வாங்கி உள்ளனர்.
பீகார் சென்று துப்பாக்கி வாங்கி வந்த நிலையில், தகவல் அறிந்த தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் துப்பாக்கியை பறிமுதல் செய்து 3 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் துப்பாக்கி மற்றும் பிடிபட்டவர்களை பீளமேடு காவல் துறையில் ஒப்படைத்த நிலையில் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“