/tamil-ie/media/media_files/uploads/2023/02/ccr.jpg)
கோவை, ஆவாரம்பாளையம், இளங்கோ நகர் கிழக்கு வீதியை சேர்ந்தவர் யுவராஜபாண்டியன் கோவை மாநகர குற்றப்பிரிவில் புகார் ஒன்று அளித்துள்ளார்.
அதில் கோவையில் DS Banking Solution டெலி கால் சென்டர் நடத்தி வரும் தினேஷ் என்பவர் யுவராஜ பண்டியனிடன் இணைய வழி மூலம் வங்கியில் லோன் வாங்கி தருவதாக ஆதார்கார்டு, பான் கார்டு உள்ளிட்ட விபரங்களை பெற்றுக்கொண்டு தன்னுடைய பெயரில் வங்கிக்கணக்கு தொடங்கி லோன் பெற்று மோசடி செய்துள்ளார்.
இதனையடுத்து குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து தினேஷ் என்பவரை போலீசார் விசாரணை நடத்தினர். இதில் போலி டெலிகால் நடத்தியது தெரியவந்ததையடுத்து மோசடிக்கு பயன்படுத்திய செல்போன்கள்,கம்ப்யூட்டர், 6000 வாடிக்கையாளர்களின் ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்தனர்.மேலும் மோசடியில் ஈடுபட்ட நபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.