encounter in salem : சேலத்தில் போலீசார் மீது தாக்குதல் நடத்திய ரவுடி கதிர்வேல், போலீசார் நடத்திய என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அங்கு பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் சமயம் என்பதால், மாநிலமெங்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரவுடிகளை போலீசார் கைது செய்து வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் ரவுடி கதிர்வேல், இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இவர் போலீசிடம் சிக்காமல் தொடர்ந்து தலைமறைவாகவே இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், சேலம் காரிபட்டி அருகே கதிர்வேல் பதுங்கியிருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து போலீசார் அங்கே விரைந்தனர். கதிர்வேலை, போலீசார் பிடிக்க முயன்ற போது, கதிர்வேல், போலீசார் மீது தாக்குதல் நடத்தினார். இந்த தாக்குதலில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் உள்ளிட்ட போலீசார் காயமடைந்தனர். இதனையடுத்து நடந்த என்கவுன்டர் தாக்குதலில், ரவுடி கதிர்வேல் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இதுதொடர்பாக, போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாலேயே என்கவுன்டர் செய்யவேண்டிய .சூழ்நிலை ஏற்பட்டது. சேலத்தில், ரவுடிகள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வரும் நிலையில், ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.