Advertisment

‘சிறைக்குள் மனரீதியாக உடைக்க முயன்றார்கள்; விவசாயிகளுக்காக எனது போராட்டம் தொடரும்’ - அருள் ஆறுமுகம் உறுதி

நவம்பர் 2023-ல் சிப்காட் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததற்காக மாநில அரசால் கைது செய்யப்பட்ட 21 விவசாயிகளில் உழவர் உரிமை இயக்கத்தை நடத்தி வரும் முன்னாள் தொழில்நுட்ப வல்லுநரும் கிருஷ்ணகிரியில் வசிக்கும் அருள் ஆறுமுகமும் ஒருவர்.

author-image
WebDesk
New Update
Arul Arumugam 1

விவசாயி, செயற்பாட்டாளர் அருள் ஆறுமுகம் 68 நாட்கள் சிறையில் இருந்த பின்னர், புதன்கிழமை மாவட்ட நீதிமன்ற அமர்வால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

நவம்பர் 2023-ல் சிப்காட் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததற்காக மாநில அரசால் கைது செய்யப்பட்ட 21 விவசாயிகளில் உழவர் உரிமை இயக்கத்தை நடத்தி வரும் முன்னாள் தொழில்நுட்ப வல்லுநரும் கிருஷ்ணகிரியில் வசிக்கும் அருள் ஆறுமுகமும் ஒருவர்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: ‘Tried to break me mentally inside prison; I will continue my protest for farmers’: Activist Arul Arumugam

விவசாயி, செயற்பாட்டாளர் அருள் ஆறுமுகம் 68 நாட்கள் சிறையில் இருந்த பின்னர்,  புதன்கிழமை மாவட்ட நீதிமன்ற அமர்வால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மேல்மா கிராமத்தில் தமிழ்நாடு மாநில தொழில்கள் மேம்பாட்டுக் கழகத்தின் (சிப்காட்) விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததற்காக அருள் ஆறுமுகம் கைது செய்யப்பட்டார்.

உழவர் உரிமை இயக்கம் நடத்தும் முன்னாள் தொழில்நுட்ப வல்லுனரும் கிருஷ்ணகிரியில் வசிப்பவருமான அருள் ஆறுமுகம், சிப்காட் திட்டத்திற்கு எதிராகப் போராடியதற்காக நவம்பர் 2023-ல் மாநில அரசால் கைது செய்யப்பட்ட 21 விவசாயிகளில் ஒருவர்.

அருள் மற்றும் 6 விவசாயிகள் மீது தமிழக அரசு குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தது. பின்னர், மற்ற 6 பேர் மீதான சட்டத்தை ரத்து செய்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இருப்பினும், அருள் சிறையில் இருந்ததால், விவசாய அமைப்புகள் மற்றும் செயற்பாட்டாளர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி, அவர் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் கைவிடுமாறு அரசை வலியுறுத்தினர்.

கடந்த ஜனவரி 5-ம் தேதி தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் பி. அமுதா கூறியதாவது: பல்வேறு கோரிக்கைகளின் அடிப்படையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், அருள் ஆறுமுகம் மீதான குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குகளை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார்.

நவம்பர் 4, 2023-ல் கைது செய்யப்பட்டதாகவும், பொதுச் சொத்து சேதச் சட்டத்தின் கீழ் ஒரு வழக்கு உட்பட இரண்டு வழக்குகளுக்காக ரிமாண்ட் செய்யப்பட்டதாகவும் அருள் கூறினார். அருள் நவம்பர் 4, 2023-ல் கைது செய்யப்பட்டதாகவும், பொதுச் சொத்து சேதச் சட்டத்தின் கீழ் ஒரு வழக்கு உட்பட 2 வழக்குகளில் ரிமாண்ட் செய்யப்பட்டதாகவும் கூறினார். (முகநூல்/அருள் ஆறுமுகம்)

புதன்கிழமை, ஆறுமுகம் சிறையில் இருந்து வெளியே வந்தபோது, ​​​​அவரது நண்பர்கள் மற்றும் பிற விவசாயிகள் அவரை வரவேற்றனர்.

indianexpress.com க்கு அளித்த சிறப்பு நேர்காணலில், அருள் ஆறுமுகம் தான் சிறையில் இருந்த நாட்கள் குறித்தும், ஆளும் அரசாங்கத்தால் துரோகம் இழைத்ததாக உணர்ந்தது குறித்தும், இந்த போராட்டத்தை எவ்வாறு முன்னெடுத்துச் செல்லப் போகிறேன் என்பது குறித்தும் பேசினார்.

பொய் வழக்குகள்

அவர் கைது செய்யப்படுவதற்கு முன்பு நடந்த நிகழ்வுகள் குறித்து பேசிய அருள், 2023 நவம்பர் 4-ம் தேதி கைது செய்யப்பட்டதாகவும், பொதுச் சொத்தை சேதம் செய்த தடுப்பு சட்டத்தின் கீழ் ஒரு வழக்கு உட்பட 2 வழக்குகளுக்காக ரிமாண்ட் செய்யப்பட்டதாகவும் கூறினார்.

“68 நாட்களுக்குப் பிறகு, நான் சிறையிலிருந்து வெளியே வந்திருக்கிறேன். மேல்மா சிப்காட் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியதற்காக என் மீது மொத்தம் 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவை அனைத்தும் பொய் வழக்குகள், கலெக்டர் அலுவலகம் சென்று மனு கொடுத்தால், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக வழக்கு பதிவு செய்வார்கள்” என்று அருள் ஆறுமுகம் கூறினார்.

“நாங்கள் டிராக்டரில் செல்ல அனுமதிக்கப்படவில்லை, அதிகாரிகளால் நாங்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டோம். ஒரு மணிநேரம் அல்லது அதற்கும் மேலாக காத்திருந்தோம், நாங்கள் வட்டாட்சியரையோ அல்லது மற்ற அதிகாரிகளையோ சந்திக்க சாலையில் காத்திருந்தபோது, ​​நாங்கள் சாலை மறியலுக்கு அழைத்து வரப்பட்டதாக வழக்குப் பதிவு செய்தனர். ஆகஸ்ட் 29-ம் தேதி மட்டும் என் மீது ஒரே உள்ளடக்கத்துடன் ஐந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நாங்கள் திருவண்ணாமலையில் பல கிராமங்களுக்குச் சென்று மற்ற மக்களுடன் சண்டையிட்டது போல, பிரச்சினைகளில் நாங்கள் சித்தரிக்கப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன” என்று அருள் ஆறுமுகம் கூறினார்.

ஆகஸ்ட் 29-ம் தேதி, பொது ஆலோசனைக்கு அழைக்கப்பட்டபோது, ​​சாலை மறியலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் அதிகாரிகள் ஒரு தம்பதி கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார். போராட்டக்காரர்கள் நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பியதையடுத்து, போலீசார் நீண்ட ஆலோசனைக்குப் பின் அவர்களை விடுவித்தனர். இருப்பினும், அவர்கள் திரும்பி வந்ததும், போலீஸ் வாகனத்தின் கண்ணாடியை சேதப்படுத்தியதற்காக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை அறிந்தனர்.

“இரண்டு வழக்குகளில் நாங்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் செய்யப்பட்டோம். இது குறித்து வந்தவாசி போலீசார் அனகாவூரில் பி.பி.டி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். ஜூலை மாதம் நடந்த சம்பவம் தொடர்பாக மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. நாங்கள் சிறப்பு வட்டாட்சியரை சந்தித்து 20 கேள்விகள் அடங்கிய தொகுப்பை முன்வைத்து திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் முன் இதற்கான பதிலை அளிக்குமாறு கூறியிருந்தோம். அன்று, சாலை மறியல் எதுவும் நடக்கவில்லை. ஆனால், நாங்கள் சாலை மறியலில் ஈடுபட்டதாகக் கூறி, எங்கள் மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்தனர்.  “இந்த இரண்டு வழக்குகளிலும் எனக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது, எனக்கு எதிரான மற்ற வழக்குகளுக்கு முன்ஜாமீன் விண்ணப்பித்துள்ளோம்” என்று அருள் ஆறுமுகம் கூறினார்.

முற்றிலும் பழிவாங்கும் நடவடிக்கை

நவம்பர் 4-ம் தேதி அதிகாலை 1 மணியளவில் சாதாரண உடையில் இருந்த அதிகாரிகள் அவரை மேல்மாவில் உள்ள மண்டபத்திலிருந்து அழைத்துச் சென்றதாக அருள் கூறினார். அதிகாரிகள் அருளிடம் அவரைக் கைது செய்யும்படி அறிவுறுத்தப்பட்டதாகவும், தங்களுக்கு மேலதிக தகவல் எதுவும் இல்லை என்றும் கூறினார்.

“எங்கள் விவசாய நிலத்தில் சுமார் 125 நாட்களாக போராட்டங்களை நடத்தி வருகிறோம். நாங்கள் பொதுமக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படுத்தவில்லை. எங்களைத் தடுக்க அவர்களுக்கு எந்த சட்டப்பூர்வ உரிமையும் இல்லை, அவர்கள் எங்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்தனர்” என்று அருள் ஆறுமுகம் கூறினார்.

தொடர்ந்து பேசிய அருள் ஆறுமுகம், “கைது செய்யப்பட்ட பிறகு, நான் ஆரணி காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டேன், பின்னர் வேலூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டேன். உயர் பாதுகாப்பு சிறைக்குள் நான் தனியாக வைக்கப்பட்டேன். இருட்டாக இருந்ததால், போர்வைகூட வழங்க சிறை அதிகாரிகள் முன்வரவில்லை. இரண்டு நாட்களுக்குப் பிறகு, நான் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு (திருநெல்வேலி) அழைத்துச் செல்லப்பட்டேன். எனது குடும்பத்தினரையும் நண்பர்களையும் சந்திக்காமல், எனது மன வலிமையை உடைப்பதற்காக என்னை திருவண்ணாமலையில் இருந்து வெகு தொலைவில் உள்ள சிறையில் வைத்தது முற்றிலும் பழிவாங்கும் நடவடிக்கையாகும்” என்று கூறினார்.

மதுரை, வேலூர், கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, கடலூர் உள்ளிட்ட மாநிலம் முழுவதும் விவசாயிகளை அரசு பல்வேறு சிறைகளில் அடைத்துள்ளது என்று அருள் கூறினார். அவர் திருவண்ணாமலையில் வசிப்பவர் அல்ல என்றும், இங்கு சொந்தமாக விவசாய நிலம் இல்லை என்றும், விவசாயிகளை போராட்டம் நடத்தத் தூண்டுவதாகவும் அரசு ஊடகங்களில் கூறியது என்று அருள் கூறினார்.

“எனது நிலம் மேல்மா பகுதியில் இருந்து 120 கி.மீ தொலைவில் உள்ளது, திருவண்ணாமலை-கிருஷ்ணகிரி எல்லையில் உள்ளது. எனது தொடர்பு முகவரி கிருஷ்ணகிரி, இருப்பினும் எனது நிலம் திருவண்ணாமலையில் உள்ளது. எனவே, நிலம் தொடர்பான அனைத்து விஷயங்களுக்கும், நாங்கள் திருவண்ணாமலைக்கு செல்வது வழக்கம். இந்த தொடர்பு முகவரி மூலம், அவர்கள் என்னை வெளி ஆள் எனக் கூறி வந்தனர்” என்று அருள் ஆறுமுகம் கூறினார்.

“நான் எட்டு வழி விரைவுச் சாலைத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தேன், இந்தத் திட்டத்தால் இங்குள்ள இரண்டு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்கள்தான் சிப்காட் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்க எனது உதவியை நாடியுள்ளனர். ஒரு தொகுதியில் இருந்து இன்னொரு தொகுதிக்கு எந்த பிரச்னை வந்தாலும் அமைச்சர்கள் செல்வதில்லையா? இத்திட்டத்தால் பாதிக்கப்பட்ட சக விவசாயிக்கு நான் கை கொடுத்தது போன்றது இது” என்று அருள் ஆறுமுகம் கூறினார்.

'பின்வாங்க மாட்டேன்'

அவரைத் தவிர, மற்ற விவசாயிகள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து, பின்னர் அவர்களை விடுவித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது என்பதை அறிந்த பிறகு நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள் என்று கேட்டபோது, ​​​​அவர்களும் தன்னுடன் கைது செய்யப்பட்டபோது எனக்கு வருத்தமாக இருந்தது, ஆனால், அவர்கள் விடுவிக்கப்பட்டிருந்ததை அறிந்தபோது நிம்மதியடைந்ததாகக் கூறினார். 

“அரசாங்கத்தின் திட்டம் என்னை அச்சுறுத்துவதும் மனச்சோர்வடையச் செய்வதும் என்பதை நான் அறிவேன். நான் கடைசி வரை பின்வாங்காமல், இறுதிவரை போரட்டத்தில் உறுதியாக இருந்தேன். எனது குடும்பத்தினரும் நண்பர்களும் உறுதுணையாக இருந்தனர். எனக்கு 13 வயதில் ஒரு மகனும், 11 வயதில் ஒரு மகளும் உள்ளனர். அவர்கள் ஓசூரில் இருக்கிறார்கள், வெகு தொலைவில் இருப்பதால் என்னைப் பார்க்க வேண்டாம் என்று என் மனைவி உட்பட அவர்களிடம் கூறினேன். ஆரம்பத்தில், என் மனைவி சற்று அதிர்ந்தாலும் நானும் என் நண்பர்களும் அவரிடம் நம்பிக்கையை விதைத்தோம். சிறையில், வாரத்திற்கு ஒருமுறை ஒன்பது நிமிட தொலைபேசி அழைப்புக்கு என்னை அனுமதிக்கிறார்கள். நான் இரண்டு முறை பேசினேன் - ஒன்று என் வழக்கறிஞரிடம் பேசவும் மற்றொன்று என் மனைவியிடம் பேசவும் பயன்படுத்தினேன். இது ஒரு சிவில் வழக்கு, குற்ற வழக்கு அல்ல, நான் விரைவில் விடுவிக்கப்படுவேன் என்று நான் அவரிடம் கூறினேன்” என்று அவர் கூறினார்.

ஆளும் அரசாங்கத்துடனான மோதல் குறித்து கருத்து தெரிவித்த அருள், 2021 தேர்தலில் ஆளும் கட்சிக்காக பிரச்சாரம் செய்ததாகவும், மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அவர்களுடன் நிற்கும் என்று நம்பியதால் உள்ளூர் எம்.எல்.ஏ-க்களுக்காக போஸ்டர்களை ஒட்டியதாகவும் கூறினார்.

மேலும், “2020 டிசம்பரில், 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன், ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, ​​பெருந்துறையில் விவசாயிகள் சங்கம் நடத்திய கூட்டத்தில் பங்கேற்று, நாங்கள் இருவரும் மேடையைப் பகிர்ந்துகொண்டோம். அக்கூட்டத்தில், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் எந்த திட்டத்தையும் அனுமதிக்க மாட்டோம் என ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். ஆனால், இவை அனைத்தும் வாக்குகளுக்காக நடத்தப்பட்ட நாடகம், நான் காட்டிக்கொடுக்கப்பட்டேன் என்பதை இப்போது புரிந்துகொண்டோம்” என்று அருள் ஆறுமுகம் கூறினார்.

இந்தப் போராட்டத்தை எப்படி முன்னெடுத்துச் செல்வது என்பது குறித்துப் பேசிய அருள், தனது வீட்டுக்குச் செல்வதற்கு முன்பே கைது செய்யப்பட்ட இடத்துக்குச் சென்று சிப்காட் திட்டத்துக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்தப் போவதாகக் கூறினார்.

தன் மீதும், மற்ற சக விவசாயிகள் மீதும் பொய் வழக்குகள் பதிவு செய்ததற்கு எதிராக, திருவண்ணாமலை ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் மீதும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருவதாக அருள் ஆறுமுகம் கூறினார்.

“நான் எந்த தவறும் செய்யவில்லை. நான் என் மக்களுக்காக போராடினேன், தொடர்ந்து போராடுவேன்” என்று அருள் ஆறுமுகம் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Farmer Protest
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment