மோடி வருகைக்கு எதிர்ப்பு; விவசாய அமைப்பினர் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்

பிரதமர் நரேந்திர மோடியின் தமிழ்நாடு வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வி.கே வி. துரைசாமி தலைமையில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் விவசாய அமைப்பினர் பங்கெடுத்தனர்.

பிரதமர் நரேந்திர மோடியின் தமிழ்நாடு வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வி.கே வி. துரைசாமி தலைமையில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் விவசாய அமைப்பினர் பங்கெடுத்தனர்.

author-image
WebDesk
New Update
Farmers organizations protest

மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாய அமைப்பினர் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

Farmers Protest |தமிழகத்தில் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று சென்னை வந்தடைந்தார். மகாராஷ்டிராவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்து ஹெலிகாப்டர் மூலம், கல்பாக்கம் சென்றார்.  
பின்னர் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறும் தாமரை மாநாடு பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.

Advertisment

இந்த நிலையில், பிரதமர் மோடி தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களில் ஒருங்கிணைப்புக் குழு பொதுச் செயலாளர் SKM (NP) அமைப்பின் தமிழ்நாடு துணை ஒருங்கிணைப்பாளருமான வி கே வி. துரைசாமி தலைமையில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து, சென்னை அருகே திருப்போரூர் கடை வீதியில் கருப்பு கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு முழக்கமிட்டனர்.

இதில், செங்கல்பட்டு மாவட்ட தலைவர் டில்லி ராம்,மாவட்டத் துணைச் செயலாளர் சின்ன வெப்பேடு சக்திவேல்,தசரதன் சண்முகம் கார்த்தி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

செய்தியாளர் க.சண்முகவடிவேல்

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Farmers Protest

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: