பஞ்சாபில் இருக்கும் மாணவர்களை அரசு உடனே அழைத்து வர வேண்டும்: பி.ஆர். பாண்டியன் வலியுறுத்தல்

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், பஞ்சாப் மாநிலத்தில் உயர்கல்வி பயின்று தமிழக மாணவர்களை பாதுகாப்பாக அழைத்துவர முதல்வர் ஸ்டாலினுக்கு பி.ஆர். பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், பஞ்சாப் மாநிலத்தில் உயர்கல்வி பயின்று தமிழக மாணவர்களை பாதுகாப்பாக அழைத்துவர முதல்வர் ஸ்டாலினுக்கு பி.ஆர். பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Farmers association leader PR Pandian urge TN Govt to bring back students studying in Punjab Tamil News

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், பஞ்சாப் மாநிலத்தில் உயர்கல்வி பயின்று தமிழக மாணவர்களை பாதுகாப்பாக அழைத்துவர முதல்வர் ஸ்டாலினுக்கு பி.ஆர். பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் மன்னார்குடியில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- 

Advertisment

தமிழ்நாட்டிலிருந்து ஏராளமான மாணவ - மாணவியர் உயர்கல்வி படிப்பதற்கும், ஆய்வுக் கல்வி மேற்கொள்வதற்கும் பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களில் பயின்று வருகிறார்கள். குறிப்பாக வேளாண் கல்வி ஆராய்ச்சிக்காக ஏராளமானோர் படித்து வருகின்றனர். கடந்த ஒரு வார காலமாக பாகிஸ்தான் - இந்தியாவுக்கு இடையே ஏற்பட்டுள்ள போரால் அனைவரும் மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர். 

பஞ்சாப் மாநிலத்தைச் சார்ந்த மாணவ மாணவியர்களை குடும்பத்தார் கல்லூரியில் இருந்தும், விடுதிகளில் இருந்தும் அழைத்து சென்றுவிட்டனர்.  தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவ மாணவியர்கள் மிகப் பெரும் அச்சத்திற்கு தள்ளப்பட்டு தூக்கமின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிப்பு குறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் அவர்களோடு தொடர்பு கொண்டு பாதிப்பு குறித்து எடுத்துரைத்திருக்கிறேன். முதலமைச்சரின் கவனத்திற்கு உடன் கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதற்கு உறுதி அளித்துள்ளார்.

எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் அவசரகால நடவடிக்கை எடுத்து பஞ்சாப் மாநிலத்தில் தங்கியிருக்கும் மாணவ மாணவியர்களை சிறப்பு பேருந்துகள்  ஏற்பாடு செய்து டெல்லி அழைத்து வந்து தமிழகத்திற்கு அழைத்து வர  அவசரகால நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

Advertisment
Advertisements

இவ்வாறு பி.ஆர். பாண்டியன் தெரிவித்தார். 

செய்தி: க.சண்முகவடிவேல்.

PR Pandian

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: