/indian-express-tamil/media/media_files/2024/11/19/pMCEy8sA8ZaKc4E20mnz.jpg)
கோவையில், நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்பெற வேண்டுமென வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், சட்டப்பேரவையில் நில ஒருங்கிணைப்பு சட்ட மசோதா முன்மொழியப்பட்டு, அன்றைய தினமே குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவிற்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்தார்.
எனினும், இந்த மசோதா விவசாயத்தையும், நீர் நிலைகளையும் அழிக்கும் வகையில் இருப்பதாக பல்வேறு போராட்டங்களை விவசாயிகள் முன்னெடுத்தனர். தற்போதும் இதற்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் சேர்ந்து இந்த மசோதாவிற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்தச் சட்டத்தை அமல்படுத்துவதற்கான சட்ட விதிகளை தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக விவசாயிகள் சங்க தலைவர் சூ.பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
செய்தி - பி.ரஹ்மான்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.