Advertisment

மத்திய அரசைக் கண்டித்து திருவோடு ஏந்தி விவசாயிகள் போராட்டம்

மத்திய அரசை கண்டித்து திருச்சியில் விவசாயிகள் திருவோடு ஏந்தி வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

author-image
WebDesk
New Update
Tamil news, latest news, latest tamil news, latest news in tamil Tamil nadu news, Madurai, Chennai, coimbatore, Tamilnadu news update, Trichy farmers protest

மத்திய அரசை கண்டித்து திருச்சியில் விவசாயிகள் திருவோடு ஏந்தி வியாழக்கிழமை போராட்டம் நடத்தினர். இது குறித்த விபரம் வருமாறு :

Advertisment

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும், டிஏபி பொட்டாஷ் போன்ற உரங்களின் விலையை குறைக்க, யூரியா தட்டுப்பாடு இல்லாமல் கிடைப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், காவிரி - கொள்ளிடம் வழியாக கரை புரண்டு கடலுக்கு செல்லும் காவிரி நீரை சேமித்து வைக்க தடுப்பணைகள் கட்ட வேண்டும், விவசாய சாகுபடி பயிர்களை அழித்து நாசப்படுத்தும் குரங்கு, பன்றி, மான், காட்டெருமை, மயில் போன்றவைகளை கட்டுப்படுத்த வன பாதுகாவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும், வடகிழக்கு பருவமழை தண்ணீரை ஏரி குளங்களை தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினர் திருச்சி அண்ணா சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இச்சங்கத்தின் மாநில தலைவர் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் அரை நிர்வானத்தோடு திருவோடு ஏந்தி நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

செய்தி: க.சண்முகவடிவேல் திருச்சி மாவட்டம்

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Trichy Tiruchirappalli Farmers Protest
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment